districts

img

இரும்பு குழாயை காரில் எடுத்துச் சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம்

சேலம், ஜூலை 11- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரும்புக் குழாயை திறந்த வெளியில் ஆபத்தான முறையில் எடுத்துச் சென்ற  காரால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்ச மடைந்தனர். சேலம் மாவட்டம், கந்தம்பட்டி பகுதி வழியாக செல் லும் தேசிய நெடுஞ்சாலையில், இலகுரக காரில் நீள மான இரும்பு குழாயை ஒருவர் எடுத்துச் சென்றுள் ளார். விபத்தை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பற்ற  முறையில் இரும்பு குழாய் எடுத்துச் செல்லப்பட்டதால், அக்காரின் முன்னாலும், பின்னாலும் சென்ற வாகன ஓட்டி கள் அச்சமடைந்தனர். இதுபோன்று வாகனத்தில் பாது காப்பு இல்லாமல் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. எனவே, அந்த வாகனத்தை பறிமுதல் செய்து,  ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.