districts

img

காட்டு யானைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள்

மேட்டுப்பாளையம், ஆக.26- இரவு நேரங்களில் சாலையோரம் ஒதுங்கி நிற்கும் காட்டு யானைகளின் மீது அவ்வழியே செல்லும் வாகன ஓட்டி கள் வெளிச்சம் பாய்ச்சி அதனை எரிச்ச லூட்டும் வாகன ஓட்டிகள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டா லின் வெளியிட்ட செய்திக்குறிப்பி கூறி யிருப்பதாவது, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத் தகிரி செல்லும் மலையடிவார சாலை யின் இருபுறமும் அடர்ந்த காடுகளா கும். அப்பகுதியில் யானைகள் தாகம்  தீர்க்க வனத்துறை சார்பில் சாலையை  ஒட்டியுள்ள வனப்பகுதியினுள் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. தண் ணீர் தேடி வரும் யானைகள் ஊருக் குள் நுழைவதை தடுக்க அமைக்கப் பட்டுள்ள இத்தொட்டி நீரை அருந்தி செல்ல யானைகள் வருவது வழக்கம்.  சிறுமுகை வனச்சரக பகுதியில் இருந்து  மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு நுழையும் இந்த யானைகள் சாலை யோரம் உள்ள புதர் மறைவில் நிற் கும். அவ்வழியே வாகனங்கள் வராத  போது சாலையை கடந்து செல்லும். இப்படி நிற்கும் யானைகள் மீது அவ் வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிலர்  அதன் மீது வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சத்தை பாய்ச்சி அவற்றை துன் புறுத்தும் வகையில் எரிச்சலூட்டி வரு கின்றனர். இதனால், யானைகள் பல  நேரங்களில் சாலையின் நடுவே வந்து  விடுவதோடு அவ்வழியே செல்வோரை  விரட்டவும் முயற்சிக்கிறது. இது தவ றான செயல். யானைகள் சாலையோரம்  நின்றால் வாகனத்தின் வேகத்தை குறைத்து அமைதியாக கடந்து செல்ல  வேண்டும், சாலையின் நடுவே போக்கு வரத்துக்கு இடையூராக யானை நின்றி ருந்தால் வனத்துறைக்கு தகவல் தெரி விக்க வேண்டும். எந்த காரணம் கொண் டும் தாங்களாகவே அவற்றை விரட்ட முயற்சிக்க கூடாது. யானைகளை எரிச் சலூட்டும் வகையில் அதனை படம் எடுப் பது வெளிச்சம் பாய்ச்சுவது மிக மிக  ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத் தும் என்பதால் இது போன்ற செயல்க ளில் ஈடுபடுவோர் மீது வனச்சட்டபடி நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பிட்டுள்ளது.