districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவனத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், டிச.21- காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ் நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவனத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவ னத்தில் காலியாக உள்ள துவக்க நிலை தொழில்நுட்ப பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு உத்தரவு ஏதும் இல்லாத எஸ்ஆர்சி பரிந்துரையை புறந்தள்ளி பதவி  உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறு வனத் தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மண்டல துணை இயக்குனர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் வெங்கடசாமி தலைமை வகித்தார். இதில் சங்கத் தின் மாநிலத் தலைவர் எம்.வெங்கடேசன், துணைத்தலை வர்கள் சி.முருகப்பெருமாள், எஸ்.குமார், செயலாளர் சுரேஷ்,  வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கும ரன் நன்றி கூறினார்.

தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நாமக்கல், டிச.21- குமாரபாளையம் அருகே செயல்படும் தனியார் பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருந்தியல் கல்லூரியில் சனி யன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருந்தியல் கல்லூரியில் 35 ஆம் ஆண்டு  பட்டமளிப்பு விழா சனியன்று நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் செந்தாமரை தலைமை வகித்தார். சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்ட தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்து வக்கல்லூரி துணைவேந்தர் நாராயணசாமி, மாணவர்க ளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். பல்  மருத்துவக்கல்லூரியில் படித்த 102 மாணவர்கள், மருந்தியல் கல்லூரியில் படித்த 122 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங் கப்பட்டன.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தற்கொலை முயற்சி!

தருமபுரி, டிச.21- தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற் பட்டது. தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம், மணியம்பாடி ஊராட்சி மன்றத் தலைவராக மஞ்சுளா சரவணனும், துணைத்தலைவராக ராசாத்தி வடிவேலும் இருந்து வந்தனர். இரு வரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த நான்கரை ஆண்டு காலமாக ஊராட்சி அடிப்படை வசதிகளுக்கு பணம் வழங்க துணைத்தலைவர் கையெழுத்திட்டு வந்துள்ளார். இந்நிலையில், பதவி காலம் முடிய இன்னும் 15 நாட்களே உள்ள நிலை யில், ரூ.30 லட்சம் ஊராட்சியில் பணம் இருப்பு உள்ளது. இதை எடுக்க துணைத்தலைவர் ராசாத்தியிடம், தலைவர் மஞ்சுளா ஒப்பு தல் கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவிக் கவே அவரை தகுதி நீக்கம் செய்ய ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்த மஞ்சுளா, துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து ராசாத்தியை நீக்கி தீர்மானம் போட்டுள்ளார். இதை அதிகாரிகளிடம் கொடுத்து தகுதி நீக்கம் செய்து விட்டார். இந்நிலையில், சனியன்று தருமபுரி ஆட்சி யர் அலுவலகம் முன்பு ராசாத்தி மண்ணெண் ணெயை ஊற்றி தற்கொலை முயன்றார். உட னடியாக அங்கிருந்த போலீசார் ராசாத்தியை மீட்டனர். இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், ஊராட்சி மன்றத் தலை வருக்கு ஒத்துவராத காரணத்தினால், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து தன்னை தகுதி நீக்கம் செய்துள்ளனர். அவர்  செய்யும் முறைகேடுகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊராட்சி உதவி  இயக்குனர் ஆகியோர் துணை போயுள்ள னர். என்னிடம் விசாரணை எதுவும் செய்யா மல், விளக்கம் கேட்காமல் தகுதி நீக்கம் செய் யப்பட்டது சட்டவிரோதமானது. என்னை தகுதிநீக்கம் செய்துவிட்டு, வேறொருவரை நியமித்து ரூ.20 லட்சம் கையாடல் செய்துள்ள னர். இதுகுறித்து முழுமையாக நீதி விசா ரணை நடத்த வேண்டும், என்றார்.

சிறுவன் மீது கொடூர தாக்குதல்

அவிநாசி, டிச.21- அவிநாசி அருகே சிறுவன் மீது நடத்தப்பட்ட கொடூர  தாக்குதலை தடுத்த நிறுத்த முயன்ற 2 பேரை கத்தியால் தாக் கிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம். அ.குரும்பாபா ளையம் ஆதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த கணேசன் - சுதா தம்பதியின் மகன் சத்தியவாசன் (9). இவர்  அப்பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவர், சாலை யில் நடந்து சென்ற சத்தியவாசனை அழைத்து, காரில் கிறுக்கி யதாகக்கூறி அடித்து உடைத்துள்ளார். நான் எழுதவில்லை என சிறுவன் கூறிய நிலையில், அதைக் கேட்காத மோகன்,  சிறுவனை வீட்டிற்குள் அழைத்து சென்று கதவை பூட்டிவிட்டு  பலமாக தாக்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுவனை காணாத பெற்றோர் தேடி வந்தபோது, மோகன் வீட்டில் சிறுவ னின் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து தட்டிக் கேட்க சென்ற  உறவினர்கள் செல்வராஜ், கருப்பாத்தாள் ஆகிய இருவரை யும், மோகன் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.  பாதிப்புக்குள்ளான சிறுவன் உட்பட 3 பேர் அவிநாசி அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளனர். இதுகுறித்து சேவூர் காவல் துறையினர் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியி னர் வெள்ளியன்று சேவூர் காவல் நிலையத்தில் முற்றுகையிட் டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து , அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நின்றிந்த மோகன் ராஜை போலீசார் பிடித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்  கீழ் வெள்ளியன்று இரவு கைது செய்தனர்.

ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணனை  சந்திக்க வந்த மோசடி மன்னன் கைது 

கோவை, டிச.21- வியாபாரிகள், விவசாயிகளை ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்தவர், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்திக்க காத்தி ருந்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.  சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர் தனலட்சுமி (41).  மிளகு வியாபாரி. இவரை தொடர்பு கொண்ட, கோவை சௌரிபாளையத்தை சேர்ந்த கோபி (42), என்பவர், தனக்கு இரண்டு டன் மிளகு தேவைப்படுவதாக கூறியுள்ளார். இதை யடுத்து தனலட்சுமி ரூ.14 லட்சம் மதிப்புள்ள இரண்டு டன் மிளகை கோவைக்கு அனுப்பினார். அதைப் பெற்றுக் கொண்ட கோபி ரூ.14 லட்சத்திற்கான காசோலையை கொடுத்து அனுப்பியுள்ளார். அந்த காசோலையை தன லட்சுமி வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பியது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தன லட்சுமி கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.  புகார் அடிப்படையில் கோபி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, கோபி, இதே போல் பொள்ளாச்சியை சேர்ந்த எண்ணை வியாபாரி மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற் றும் வியாபாரிகளை ஏமாற்றியதும் தெரியவந்தது. இவரை  போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், அவர் கோவை  சின்னவேடம்பட்டியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல்  கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று கோபியை கைது செய்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் கோவைக்கு வந்திருந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணனை சந்திக்க காத்திருந்தது தெரியவந்தது. மேலும்,  திமுக கட்சியில் உறுப்பினராகக்கூட இல்லாத கோபி, அக் கட்சியின் கரை வேட்டியுடன் ஆளுநரை சந்திக்க வந்தது குறித் தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.