districts

சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து ஊத்துக்குளியில் மாதர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 18 - சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து வெள்ளியன்று ஊத்துக்குளி டவுன் ஈஸ்வ ரன் கோயில் முன்பு அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்க ஊத்துக்குளி தாலுகா  கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க தாலுகா பொருளாளர் பி.வண்ணக்கொடி தலைமை ஏற்றார். கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கி தாலுகா துணைத் தலைவர் மீராலட்சுமி மற்றும் மாதர் சங்க திருப்பூர்  மாவட்ட செயலாளரும், ஊத்துக்குளி பேரூ ராட்சி ஏழாவது வார்டு கவுன்சிலருமான கே. சரஸ்வதி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் உட் பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.