ரூ.14.50 லட்சம் மோசடி - கைது
கோவை, ஜூன் 16- கோவையில் தொழிலதிபரிடம் ரூ.14.50 லட்சம் மோசடி செய்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவை, ரத்தினபுரி ஜீவானந்தம் ரோட்டை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜப்பன் (65). இவரது வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ரஞ்சித்குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். அப்போது ரஞ்சித்குமார் தான் சொந்தமாக தொழில் செய்ய விரும்புகிறேன். அதற்கு பணம் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து ராஜப்பன் ரூ.5 லட்சமும், பின்னர் ரூ.9.5 லட்சமும் கொடுத்துள்ளார். இதனைக்கொண்டு டயர் நிறுவனத்தை ரஞ்சித்குமார் ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து, ராஜப்பன் தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு ரஞ்சித்குமார், 2 வங்கி காசோலைகளை கொடுத் தார். அதனை ராஜப்பன் வங்கியில் செலுத்தியபோது, காசோலை பணம் இல்லாமல் திரும்பியது. இதுகுறித்து ரஞ்சித்குமாரிடம் கேட்டபோது, அவர் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து ராஜப்பன் காட்டூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், ரஞ்சித் குமார் சிலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காட்டூர் போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் திருட்டு – 2 பேர் கைது
கோவை, ஜூன் 16- கோவையில் வெவ்வேறு பகுதிகளில் செல்போன் திருடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை, புல்லுக்காடு தெற்கு உக்கடத்தை சேர்ந்தவர் திருமலைசாமி மகன் புகழேந்தி (19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரு கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு புகழேந்தி தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது, தனது செல் போனை காணவில்லை. நள்ளிரவில் வீடு புகுந்த அடை யாளம் தெரியாத நபர் செல்போனை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து புகழேந்தி, கடைவீதி காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து செல்போன் திருடிய நபரை தேடி வந்தனர். இந்நிலையில், அதேபகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் மீது செல்போன் திருடியதாக புகழேந்தி மற்றும் அவரது நண்பர்களுக்கு சந்தேகம் எழுந்தது. வியாழனன்று 2 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதைத் தொடர்ந்து 2 பேரையும் கடைவீதி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர்கள் இருவரும் தெற்கு உக்கடம் பகுதியில் வசித்து வரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கட்டட தொழி லாளி நூருலாம் (29) என்பவரது வீட்டுக்குள் புகுந்து செல்போன் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த கோவை உக்கடம் புல்லுக்காட்டை சேர்ந்த சஞ்சய் (20), மலுமிச்சம்பட்டி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த கார்த்தி (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, சிறையில் அடைத்தனர்.
மின் கம்பிகளில் ஈரத்துணிகளை உலர்த்தகூடாது
கோவை, ஜூன் 16- கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்களுக்கு கோவை மண்டல தலைமை பொறியாளர் வினோதன் கூறியிருப்பதாவது, தர மான ஐஎஸ்ஐ குறீயீடு பெற்ற மின்சாதனங்களை உபயோ கிக்கவும், மின் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரீ சியனை கொண்டு பணி செய்யுமாறு கேட்டு கொள்ளப் படுகிறார்கள். மின் கம்பிகள் மற்றும் இழுவை கம்பிகளில் ஈரத்துணிகளை உலர்த்தகூடாது. மின் நுகர்வோர்கள் தங்களது மின் வயரிங்குகளை முறை யாக ஆய்வு செய்து பழுதடைந்த வயரிங்குகளை புதுப்பிக்க வேண்டும். மின் இணைப்பில் ஆர்.சி.டி-யை பொருத்த வேண்டும். கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் பொழுது அருகில் மின்பாதைகள் இருப்பின் உரிய இடைவெளியோடும், உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் பணிகள் மேற் கொண்டு விபத்தினை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது, இவ்வாறு அவர் கூறினார்.
தாய்,மகன் விஷம் குடித்து தற்கொலை
பள்ளிபாளையம், ஜூன் 16- ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம். பள்ளிபாளையம் அடுத்துள்ள மொளசி வெள்ளியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (36). இவருக்கு திருமணம் ஆகவில்லை. சங்கரின் அண்ணன் ரமேஷ் குமார் (38). சங்கரின் தாயார் நீல வேணி (58). ஆகியோர் குடும்பமாக வசித்து வந்த நிலையில், சங்கரின் நண்பர் ரவி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உப்பிலிபாளையம் என்ற பகுதி அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். நண்பன் ரவியை இழந்த சோகத்தில் இருந்த சங்கர் திடீரென கடந்த 14-ஆம் தேதி அதிகாலையில் வீட்டிலிருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தினை குடித்து, சிகிச்சை பல னின்றி ஈரோடு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அறிந்த சங்கரின் தாய் நீலவேணி அதிர்ச்சி அடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டில் களைக்கொல்லி பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நீலவேணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் பொறுப்பு காவல் ஆய்வாளர் தவமணி வழக்குப் பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்த மகன் மற்றும் தாய் அடுத்தடுத்து விஷம் அருந்தி தற் கொலை செய்து கொண்ட சம்பவம் மொளசி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 மாதங்களில் 16 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
நாமக்கல், ஜூன் 16- நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங் களில் 16 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக ஆட்சியர் எஸ்.உமா தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தை கள் பாதுகாப்பு குழு கூட்டம் ஆட்சியர் எஸ். உமா தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் குழந்தைகள் தொடர்பான பாது காப்பு மற்றும் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டிய விழிப்புணர்வு கூட்டங்களை நடத்திட துறை வாரியாக அலுவலர்கள் மேற் கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆட்சியர் எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 16 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இளம் வயது திருமணம் செய்பவர்களுக்கும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் காவல் துறையினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும். இளம் வயது திருமணம், குழந்தைகள் பணியில் ஈடு படுவது, பள்ளிக்கு அருகில் தடைசெய்யப் பட்ட போதைபொருள் விற்பது மற்றும் குழந் தைகளுக்கு எதிரான வன்முறைகள் தங்கள் பகுதியில் நடப்பதாக தெரிந்தால் உடனடியாக 1098 என்ற கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு 94861 11098 என்ற எண்ணிற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் கொடுப் போரின் ரகசியம் பாதுகாக்கப்படும், என் றார். இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, உதவி ஆணையர் (தொழிலாளர் நலன்) திருநந்தன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பூங்கொடி உள்பட அரசுத்துறை அலுவலர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.7.50 லட்சம் அபகரித்த இருவர் கைது
திருப்பூர், ஜூன் 16 - சுங்கத்துறையில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்திற்கு வரவேண்டிய டிரா பேக் தொகை ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்று மோசடி செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் கல்லூரி சாலை, ஸ்ரீவித்யா நகரில் செயல்பட்டு வரும் ஏற்றுமதி நிறுவனத்திற்கு, பனியன் ஆடைகள் ஏற்றுமதி செய்த வகையில் டிராபேக் எனும் ஊக்கத்தொகை வர வேண்டி இருந்தது. இதையறிந்து ஏற்றுமதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் தூத்துக்குடியில் செயல்படுவது போன்று இருவர் போலியான ஆவணங்களை தயார் செய்து, பதிவு செய்தனர். அத்துடன் வங்கியில் கொடுத்து கணக்கு துவங்கி, சுங்கத்துறை அலுவலகத்தில் போலி ஆவணங்களை சமர்ப் பித்தனர். இதன்மூலம் ஏற்றுமதி நிறுவனத்திற்கு வர வேண்டிய ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தை வங்கி கணக்கில் பெற்று அபகரித்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஏற்றுமதி நிறுவனத்தினர் அளித்த புகாரின்பேரில் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட் டது. இதில் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மாவட் டத்தை சேர்ந்த மூன்று பேர் போலியான ஆவணங்களை தயார் செய்து ஏமாற்றியது தெரியவந்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி ஹரிராம் நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சண்முகவேல் ராஜன் (36), தூத்துக்குடி சிதம்பர நகர் டிஎம்பி காலனியை சேர்ந்த பெருமாள்ராஜ் (36) ஆகிய இரண்டு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
தடுப்புச்சுவர், தார்ச்சாலை திறப்பு
திருப்பூர், ஜூன் 16- திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டலம், 5 ஆவது வார்டுக்குட்பட்ட வாவிபாளையம் பாரிவள்ளல் நகரில் எம்.பி., நிதியில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர், தார்ச்சாலை திறந்து வைக்கப்பட்டது. திருப்பூர் எம்.பி., கே.சுப்பராயன் தொகுதி வளர்ச்சித் திட் டத்தில் ரூ.43.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த தடுப்புச்சுவர் மற்றும் தார்ச்சாலையை வெள்ளியன்று கே.சுப்பராயன் எம்.பி., மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் மக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
ரூ.60 லட்சம் ஏமாற்றியவர் கைது
திருப்பூர், ஜூன் 16 - திருப்பூர் வீரபாண்டி அய் யம்பாளையம், சிவசக்தி நகரை சேர்ந்த ராமர் என்பவ ரும், அவரது மனைவியும் மாதாந்திர ஏலச்சீட்டு, தீபா வளி, பொங்கல் பண்டு சீட்டு நடத்தினர். இதில் சுமார் ரூ.60 லட்சம் வரை வசூல் செய்து ஏமாற்றியதாக புகார் தெரி விக்கப்பட்டது. இதுதொடர்பாக திருப் பூர் மாநகர மத்திய குற்றப்பி ரிவில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொள் ளப்பட்டது. இதில் ராமர் கைது செய்யப்பட்டார்.
உடுமலை அரசுப்பள்ளி மாணவிகளுக்கு காமராசர் விருது
உடுமலை, ஜூன் 16 - உடுமலைப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் 2021-2022 ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் எஸ். சஹானா பர்வின், கோ.சி.யாழினி ஆகியோர் 2021-2022 கல்வி யாண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது பெற பள் ளிக் கல்வித்துறையால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருது பெற்ற மாணவியர்களுக்கு பெருந்தலைவர் காமராசர் விரு துக்கான சான்றிதழை திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி வழங்கினார். 12ஆம் வகுப்பு மாணவி எஸ்.சஹான பர்வின் வங்கிக் கணக்கில் ரொக்கப்பரிசு ரூபாய் இருபதாயிரமும், 10 ஆம் வகுப்பு மாணவி கோ.சி.யாழினி வங்கிக் கணக்கில் ரொக்கப்பரிசு ரூபாய் பத்தாயிரமும் வழங் கப்பட்டது. விருது பெற்ற மாணவியர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் ப.விஜயா, உதவித் தலைமை ஆசிரியர்கள் ஏ.ஜெய ராஜ், டி. மஞ்சுளா, தமிழாசிரியர்கள் சின்னராசு, ராஜேந்திரன் உள்பட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற் றோர்கள் மற்றும் மாணவிகள் பாராட்டினர்.
திருப்பூர் ஆட்சியரகத்தில் பாம்புகள் பிடிப்பு
திருப்பூர், ஜூன் 16 - திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளா கத்தில் பல்வேறு அரசு துறை கள் செயல்பட்டு வருகின் றன. இங்கு பல்வேறு சேவை களை பெற தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந் நிலையில் வெள்ளியன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் பணிக்கு வந்தபோது மாவட்ட ஆட்சியர் அலுவல கம் பின்புறத்தில் பாம்புகள் சென்றதைப் பார்த்துள்ள னர். உடனடியாக வனத்து றையினருக்கு தகவல் அளிக் கப்பட்டது. இதையடுத்து சம் பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் இரண்டு பாம்பு களை பத்திரமாக மீட்டு வனப் பகுதிக்குள் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். இத னால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்பு றம் ஜேசிபி வாகனம் மூலம் புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற் றது.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:24.54/60அடி நீர்வரத்து:கனஅடி
வெளியேற்றம்:27கனஅடி
அமராவதி அணை நீர்மட்டம்: 65.55/90அடி.நீர்வரத்து:127கனஅடி
வெளியேற்றம்:256கனஅடி
யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கல்
உதகை, ஜூன் 16- பந்தலூர் அருகே யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும் பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், வைத்திரி அருகே உள்ள சீயம்பன்குதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (50). இவர் நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா, அம்பலமூலா அருகே அயினிபுறா பழங்குடியின மக்கள் காலனியில் உள்ள தனது தங்கை வீட்டில் தங்கியிருந்து, கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், பாஸ்கரன் புதனன்று இரவு அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப் போது, காட்டுயானை தாக்கியதில் பரிதாபமாக உயிரி ழந்தார். இச்சம்பவம் குறித்து அம்பலமூலா காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவரது குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையை உதவி வனபாதுகாவலர் கருப்புசாமி வழங்கினார். அப்போது துணை காவல் கண்காணிப்பாளர் கள் செந்தில்குமார், செல்வராஜ், வனச்சரகர்கள் ரவி, ராதா கிருஷ்ணன், சஞ்சீவி, வீரமணி, யுவராஜ் ஆகியோர் உடனி ருந்தனர்.
தீ விபத்து
சேலம், ஜூன் 16- சேலம், ஓமலூர் அருகே உள்ள எம்.செட்டிபட்டி நத்த மேடு பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பனின் மனைவி அயிதா. இவர் வளர்த்து வந்த மாடு களுக்கு தென்னங்கீற்றால் மேய்ந்துள்ள மாட்டு கொட்ட கையில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைக்கண்ட அயிதா, ஓம லூர் தீயணைப்பு துறையின ருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.