districts

பிரசவத்தின் போது தாய் சேய் மரணம்: விஜியா மருத்துவமனை மீது நடவடிக்கை

தருமபுரி நவ-18,  தருமபுரியில் தனியார் மருத்து வமனையில் தாய் சேய் இருவ ரும் கடந்த 13ஆம் தேதி உயிரி ழந்த விவகாரத்தில் மருத்துவம் மற் றும் ஊரக நலப் பணிகள் இணை  இயக்குனர் சாந்தி மருத்துவ மனையை ஆய்வு செய்து தரத்தை  குறைத்து அறிக்கை வெளியிட்டுள் ளார். தருமபுரி நகர் பகுதியில் உள்ள விஜயா என்கிற பெயரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கடத் தூர் பகுதியைச் சேர்ந்த கோகுல  கண்ணன் மனைவி சந்தியா பிரச வத்திற்காக கடந்த வாரம் சேர்க்கப் பட்டார். மருத்துவர் இல்லாமல் செவிலியர்களே மருத்துவம் பாரத்ததாலும், மருத்துவ உப கரணங்கள் இல்லாததாலும் சிசு  இறந்து பிறந்தது. பின்பு உறவினர் களுக்கு தெரியாமல் மேல் சிகிச் சைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட போது  சந்தியா ஏற்கனவே உயிரிழந்துவிட் டதாக அரசு மருத்துவர்கள் தெரி வித்தனர். இதனால் தாயும் சேயும் என இருவரும் உயிரிழந்தனர்.  இருவரின் உயிர் இழப்புக்கு காரணமாக இருந்த மருத்துவ நிர் வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் மருத்துவரை கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து போராட்டம் அன்றைக்கு உறவினர் கள் நடத்தினர்.   இது குறித்து சந்தியாவின் கண வர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறை மற்றும் சுகாதாரத் துறையின ரும் ஆய்வு மேற்கொண்டனர்.  திங்களன்று தருமபுரி மாவட்ட  சுகாதாரத் துறை இணை இயக்கு னர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக் கையில், மருத்துவ வசதிகளின்  அடிப்படையில் வகைப்படுத்தப் பட்டதில் லெவல் 3 என்கிற சூப்பர்  ஸ்பெஷாலிட்டி பகுதியில் இருந்து  லெவல் 2 என்கிற ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என தரம் குறைத்து செயல்பட அறிக்கையை வெளியிட் டுள்ளார்.   இதில் லெவல் இரண்டு என்கிற  ஸ்பெஷாலிட்டி தகுதிக்கு வழங்கப் பட்டுள்ள சிகிச்சைகளை மட்டுமே  நோயாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டும் எனவும், மகப்பேறு பிரச வத்தின் போது கூடுதலாக ஒரு  மகப்பேறு மருத்துவரை பணிய மர்த்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள தாகவும், மீண்டும் ஆறு மாத காலத் திற்கு பிறகு மகப்பேறு சிகிச்சைக ளின் தரம் மற்றும் மகப்பேறு மர ணத்தின் எண்ணிக்கையை கருத் தில் கொண்டு மீண்டும் தேவைப்ப டின் லெவல் மூன்றுக்கு தரம் உயர்த் தப்படும் என்பதை விளக்கி மருத்து வம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் சாந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். தருமபுரி குமாரசாமிபேட்டை பகுதியில் உள்ள இம்மருத்துவ மனை பாஜகவின் தருமபுரி மாவட் டத் தலைவர் பாஸ்கர் என்ப வருக்கு  சொந்தமானது என்பது குறிப்பிடத் தக்கது.