உதகை, நவ.20- உதகையில் நான்கு சக்கர வாகனங்களை வாங்கி விற்று தருவதாக கூறி, பலரை ஏமாற் றிய நபரை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப் பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள காந்தல் பகுதியை சேர்ந்தவர் அயூப் என்கிற அபாஸ். இவர், உதகையில் உள்ள சிலரிடம், அவர்களது வாகனங்களை வாங்கி விற்றுத்தரு வதாக கூறி முன்பணம் மட்டும் கொடுத்து விட்டு வாகனங்களை எடுத்துச் செல்வதை வாடிக் கையாக கொண்டுள்ளார். பின், அந்த வாகனத் தையோ அல்லது அதற்குண்டான பணத்தையே சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு வழங் காமல் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும், அப்பாசின் செல்போனிற்கு அழைத் தால், அவரது நண்பர்கள் சிலர் போனை எடுத்து வாகன உரிமையாளர்களை மிரட்டும் தோரணை யில் பேசுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதுபோன்று நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 90க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் நபர்களை, அப் பாஸ் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆவேசமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். இதனைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட நபர் மீது விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் அளித்தனர். அத்தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து விசாரணை மேற்கொள்ள உரிய காவல் நிலையங்கள் மற்றும் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளார்.