ஈரோடு, ஆக.14- நாங்குநேரி சம்பவத்திற்கு எதிராக அனை வரும் குரல் கொடுக்க வேண்டும், நிலவில் கால் வைக்கும் நேரத்தில் நம் சமூகம் இப் படித்தான் இருக்கப் போகிறதா? என்கிற கவ லையை வெளிப்படுத்தி ஈரோடு புத்தக கண் காட்சியில் முதன்மை விஞ்ஞானி த.வி.வெங் கடேஸ்வரன் உரையாற்றினார். தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை இணைந்து நடத்தும் ஈரோடு புத்தக திருவிழாவில் ஞாயிறன்று நடைபெற்ற சிந் தனை அரங்கில் அறிவியல் எழுத்தாளர், விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பங் கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நாம் நிலவிற்கு நம்மிடம் உள்ள ராக்கெட் மூலம் சந்திராயன் அனுப்பியுள் ளோம். அதன் பிறகு ரஷ்யாவிலிருந்து அனுப் பிய ராக்கெட் முன்பே போய் சேர்வது எப்படி என்று கேட்கின்றனர். நம்மிடம் உள்ள ராக் கெட் குறைந்த திறனுடையது. அதிக திறன் கொண்ட ராக்கெட் தயாரிக்கும் வரை காத்தி ருக்க வேண்டிய அவசியமில்லை. அதை வைத்துக் கொண்டே நாம் நிலவிற்குச் செல்ல முடியும் என்பதை நிருபித்துள்ளோம்.
45 கோடி ஆண்டுகளக்கு முன்பு சூரி யன், பூமி எல்லாம் உருவான போது எஞ்சிய பொருட்கள் விண்வெளியில் விண்கல், வால் நட்சத்திரம் என்ற பெயரில் சுற்றிக் கொண் டுள்ளது. வால் நட்சத்திரத்தில் பாதி தண்ணீர். இந்த கல், வால்நட்சத்திரம் எல்லா கோள்கள் மீதும் மோதும். பூமியின் மீதும் மோதும். பூமி யில் அவ்வாறு மோதும் போது இரவாக இருந்ததென்றால் எரிநட்சத்திரமாகத் தெரியும். ராக்கெட்டிலிருந்து விண்கலம் நில வில் இறங்கும். இறங்கும் போது, இடர் இல் லாத இடம் பார்த்து இறங்கும். அதற்கான செயற்கை நுண்ணறிவு அதிலுள்ள கணிணி யில் வைக்கப்பட்டுள்ளது. அந்த செயற்கை நுண்ணறிவு நாம் தயாரித்தது. ஏன் நிலவின் தென் துருவ பகுதிக்குப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. நாம் குடிக்கும் தண்ணீரும் ஏதோ ஒரு காலத்தில் வால் நட்சத்திரம் பூமிக்கு எடுத்து வந்த தண்ணீர் தான். இன்றும் ஒவ்வொரு விநா டியும் 4, 5 டேங்கர் அளவு தண்ணீர் குட்டி வால் நட்சத்திரம் பூமியில் மோதி விழுந்து கொண்டே உள்ளது. சிறுதுளி பெரு வெள் ளம். ஆதிகால பூமியில் கடல் இல்லை. கடல் இல்லை என்றால் மழை இல்லை, ஆறு, ஏரி எதுவும் இல்லை. இப்படி வால்நடசத்திரம் விழுந்து விழுந்து தண்ணீர் நிரம்பி கடல்கள் உருவாகின. அதன் பின்னர் இந்த மழை சுழற்சி உருவானது.
நிலவிலும் இதுபோல் விழும். நிலவில் காற்று இல்லை என்பதால் சூரிய ஒளி படும் போது ஆவியாகி விடும். சூரிய ஒளி புக முடி யாத இடத்தில் விழுந்த நீர் மண்ணுக்கு அடி யில் இருக்கலாம். இவ்வாறு ஆழமான பள் ளங்கள் நிலவின் தென்துருவ பகுதியில் இருக் கிறது. அங்கு வால்நட்சத்திரம் விழுந்து தண் ணீர் உள்ளே சென்றிருக்கலாம். இருக்கும் என்ற சான்றை சந்திராயன் 1 கொடுத்தது. எதிர்காலத்தில் நிலவில் குடியிருப்பு ஏற்படுத் தினால் குடிக்க தண்ணீர் வேண்டும். சுவா சிக்க ஆக்சிஜன் வேண்டும். தண்ணீர் என்பது H2O. அதை உடைத்தால் ஹைட்ரஜன், ஆக்சி ஜன் கிடைக்கும். ஆகவே சுவாசிக்கலாம். எரிபொருளாகவும் பயன்படுத்தலாம். இவ் வாறு நிலவில் முதல் குடியிருப்பு ஏற்பட் டால் அது தென்துருவ பகுதியில் தான். அத னால் தான் இஸ்ரேலும், ஜப்பானும் முயற்சி செய்தனர். ரஷ்யாவும் அங்கேதான் செல்கி றது. அமெரிக்காவும் நிலவிற்குச் செல்ல ஒரு திட்டம் வைத்துள்ளனர். 1976ல் ரஷ்யா நிலவில் இறங்கியது. அதன் பின்னர் 20, 25 ஆண்டுகள் யாரும் அந்த பக்கம் தலை வைத்து படுக்கவில்லை. இப்போது நிலவிற்கு இரண்டாவது தேனிலவு செல் கின்றனர். ஏனென்றால் சர்வதேச அரசியல். நிலவின் தரையில் பூமியில் இல்லாத பல் வேறு விதமான அரிய தனிமங்கள் இருக் கிறது. முதல் தொழில்நுட்ப பிரச்சனையில் நிலக்கரி அச்சாணி. இரண்டாவதில் இரும்பு, மூன்றாவது தொழில்நுட்ப புரட்சியில் அச் சாணியாக விளங்கியது சிலிக்கான். இப் போது நான்காவது தொழில்நுட்ப புரட்சியில் ரேர் எர்த் எலிமென்ட்ஸ் எனப்படும் தனி மங்கள் தான் அச்சாணி.
அத்தகைய தனிமங்கள் நிலவில் அப ரிமிதமாக உள்ளது. அது கொஞ்சம் தான் தேவை. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு தேவையான மொத்த ஆற்றலுக்கு ஒரு டன் ஹீலியம் 3 போதுமானது. இதனை நிலவிலிருந்து எடுத்து வந்தால் போதுமானது. நிலாவின் தரையில் ஏராளமாகக் கிடக்கிறது. எனவே இதனை ஒரு வாய்ப்பாக பார்க்கின்றனர். அதனை எடுப்பதற்கான தொழில்நுட்பங்கள் இன்று வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவை வைத்து நிலவில் இறங்கி விடலாம். அதேபோல் வேலை செய்யலாம். ஆட்கள் போக வேண்டுமென அவசியம் இல்லை. விண்வெளி வாணிபம் என்பது உலக அள வில் கருத்து உள்ளது. முதல் முதலில் விண் கலத்தை நிலவில் மோத வைத்தது சோவியத் யூனியன். முதல் முதலில் நிலவில் மென்மை யாக தரை இறங்கியது சோவியத் யூனி யன். அதேபோல் விண்கலத்தை இறக்கிய தும் சோவியத் யூனியன். முதலில் சென்ற சோவியத் விண்கலம் சோவியத் கொடியை நிலவில் பறக்க விட்டு பல்வேறு இடங்களில் போட்டுள்ளது.
பூமியில் ஒரு சட்டம் உள்ளது. அதன்படி முதலில் யார் கண்டுபிடிக்கிறார்களோ அவர் களுக்கு அது சொந்தம். சோவியத் யூனியன் நிலவில் கொடியைப் போட்டதால் நிலா என் னுடையது என்று சொல்லி விடுமோ என்று அஞ்சிய நாடுகள்,குறிப்பாக அமெரிக்கா, ஒரு சர்வதேச சட்டம் போட சோவியத் ரஷ் யாவை அழைத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட சோவியத் ரஷ்யா நிலா மனித குலத்தின் பொது சொத்து என்று அந்த சட் டம் சொல்ல வேண்டும் என்றது. அதனை ஏற்று அனைத்து நாடுகளும் கையெழுத்து போட்டன. எல்லா சர்வதேச சட்டமும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மறு பரிசீலனைக்கு வரும். அதன்படி அமெரிக்கா என்ன சொல் கிறது என்றால் அந்த சட்டம் அந்த காலத் திற்கு. இந்த காலத்திற்கு அதனை மாற்ற வேண்டும் என்கிறது. அதேசமயம் தானே ஒரு சட்டத்தை போட்டுக் கொண்டனர். அந்த சட்டம் , விண்வெளியில் இருக்கும் பொருளை தனியார் நிறுவனங்கள் உரிமை கோர முடியும் என்கிறது. எதிர்காலத்தில் உடைமை அனு மதிக்கப்பட்டால் யாருக்கெல்லாம் உரிமை தருவார்கள்? இறுதியாக 5 நாள் முன்னாடி வரை மிகுந்த மன நிறைவோடு இருந்தேன். நாங்குநேரி யில் நன்றாக படிக்கிறார்கள் என்று ஆசிரி யர்கள் சான்றளித்தனர். அவர்கள் இன் னொரு கலாம், ராமானுஜம், சர்.சி.வி.ராமன், போல எதிர்பார்ப்போம். சந்திரன் மேல் கால் வைக்கும் இன்றய காலத்தில் நம் சமூகம் இப்படித்தான் இருக்கப் போகிறதா!. என் றால் நாம் சந்தோசமாக இருக்கமுடியுமா! இந்த மாதிரியான அவலத்தை நினைத்து எல்லாரும் வருத்தப்பட வேண்டும். அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும், என் றார்.