districts

img

குரங்கு அம்மை பரிசோதனை மாநில சுகாதாரக் குழுவினர் ஆய்வு

கோவை, செப்.11- கோவை சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை பரிசோதனை குறித்து மாநில சுகாதாரக் குழுவினர் நேரில் ஆய்வு மேற் கொண்டனர். குரங்கு அம்மை நோய்த் தொற்று பல் வேறு நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலை யில், அந்த நோய் பாதிப்புள்ள நாட்டுக்கு  சென்றுவிட்டு தில்லி வந்த ஒருவருக்கு  குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள் ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவ டிக்கை மேற்கொள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி யுள்ளது. ஏற்கெனவே, சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறை உத்தர விட்டுள்ளது. அதன்படி, கோவை சர்வ தேச விமான நிலையத்தில் ஆக.18 ஆம் தேதி யன்று முதல் வெளிநாடுகளில் இருந்து வரும்  பயணிகளுக்கு மருத்துவக் குழு நியமிக் கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகி றது. இந்நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை பரிசோ தனை செய்யும் பணிகளை மாநில சுகாதா ரத் துறையின் தொற்று நோய்கள் பிரிவு இணை இயக்குநர் செந்தில்குமார் தலைமை யிலான மருத்துவக் குழுவினர் வெவ்வா யன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண் டனர். இதில், கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பு.அருணா உள் ளிட்ட துறை சார்ந்த ஆதிகாரிகள் கலந்து கொண்டனர். இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் பு.அருணா கூறுகையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு  அம்மை பாதிப்பு குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 6900 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரி சோதனையில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை, என்றார்.