districts

கலப்படத்தை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தம்

சேலம், டிச.27- அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை உற் பத்தி செய்யப்படும் ஆலைகளில் கல படத்தை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. வெல்லம் தயாரிப்பில் கரும்புச்சாற் றுக்கு பதிலாக சர்க்கரை அதிகளவில் கலந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும், மேலும், ரசாயனம் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட நிறமூட்டிகள் சேர்ப்பது உட்பட பல்வேறு கலப்படங்கள் செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப் புத் துறை அதிகாரிகள் கருப்பட்டி, வெல் லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை உற் பத்தி செய்யப்படும் ஆலைகளில் கலப்ப டத்தை தடுக்கும் வகையில் ஆலைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என  உத்தரவிட்டுள்ளனர்.  இதன்படி சேலம், நாமக்கல், ஈரோடு  மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ஆலை களில் சிசிடிவி கேமரா பொருத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந் தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், வெல்லம் உற்பத்தி ஆலை உரிமையாளர் களுடன் கூட்டம் நடத்தி, ஆலைகளில் கண் காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தப் பட்டு வருகிறது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், சேலம், நாமக் கல், ஈரோடு மாவட்டங்களில் கரும்பு சாகு படி அதிகளவில் செய்யப்படுகிறது. இங்கு  அறுவடை செய்யப்படும் 60 சதவிகிதம் கரும்பு, சர்க்கரை ஆலைகளுக்கும், 40  சதவிகிதம் வெல்லம் உற்பத்தி செய்யப் படும் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது.  இந்த ஆலைகளில் கரும்புச் சாறில் இருந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை ஆகியவை உற்பத்தி செய் யப்படுகிறது.  சேலம் மாவட்டத்தில் ஓமலூர், தின்னப் பட்டி, தீவட்டிப்படி, செம்மாண்டப்பட்டி, மேச்சேரி, காமலாபுரம், ஆத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வெல்லம் உற்பத்தி செய்யப்படும் ஆலைகள் உள்ளன. நாமக் கல், ஈரோடு மாவட்டங்களிலும் நூற்றுக் கணக்கில் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் நாள் ஒன்றுக்கு பல நூறு டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதை தவிர வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப் படுகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டு களாக வெல்லம் உற்பத்தியில் கலப்படம் அதிகளவில் சேர்க்கப்படுகிறது.

கரும்புச் சாறுக்கு பதில் சர்க்கரையும், ரசாயனம், நிற மூட்டிகள் அதிகளவில் சேர்க்கப்படு கிறது. இதுபோன்ற கலப்படம் செய்யப்பட்ட வெல்லத்தை தொடர்ந்து சாப்பிடுவர்க ளுக்கு உடல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த கலப்படத்தை தடுக்க வெல்லம் உற்பத்தி செய்யப்படும் ஆலைகளில் கண்காணிப்பு  கேமராக்கள் பொருத்தி, உற்பத்தியை கண் காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. சேலம் மாவட்டத்தில் 60 ஆலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள் ளது. மீதியுள்ள ஆலைகளில் கேமரா  பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.  மேலும், பொங்கல் பண்டிகையை முன் னிட்டு வெல்ல ஆலைகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் வெல்ல ஆலைகளில் தீவி ரமாக கண்காணித்து வருகின்றனர். சேலத் தில் 20க்கும் மேற்பட்ட ஆலைகளில் இருந்து 25 டன் சர்க்கரை, 45 கிலோ ரசாயன பவு டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள் ளது, என்றனர்.