districts

img

திருப்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் கேமராக்கள் பொருத்திக் கண்காணிப்பு

திருப்பூர், மே 4- திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட் டுள்ள எல்ஆர்ஜி அரசு மக ளிர் கல்லூரி வாக்கு எண் ணும் மையத்தில் கூடுதல் கண்காணிப்புக் கேமிராக் கள் பொருத்தி கண்காணிப் புப் பணி மேம்படுத்தப்பட் டுள்ளது. திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப் பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. எட்டு  சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல் லூரியில் 256 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்த சூழ்நிலை யில், தற்போது மேலும் கூடுதலாக எட்டு  கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. குறிப்பாக கோடை வெப்பம் கார ணமாக சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் கொதி நிலைக்குச் சென்று அடிக்கடி பழுதா கின்றன. திருப்பூர் மட்டுமில்லாது, வேறு பல  நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும்  மையங்களிலும் இது போன்ற பிரச்சனை கள் ஏற்பட்டு வருகின்றன. எனவேதான் வழக் கமாக நிர்ணயிக்கப்பட்ட கேமிராக்களுடன், கூடுதல் கேமிராக்கள் வெள்ளிக்கிழமை பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கண்கா ணிப்பு பணி மேம்படுத்தப்பட்டுள்ளது என்று  தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.  திருப்பூர் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலு வலரும், மாவட்ட ஆட்சியருமான தா.கிறிஸ் துராஜ், மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு மற்றும் அரசியல் கட்சி களின் பிரதான முகவர்கள் உள்ளிட்டோர் இப்பணியை நேரில் ஆய்வு மேற்கொண்ட னர்.