உதகை, பிப்.5- கடன் வாங்கி தருவதாக கூறி, நீலகிரியில் விவசாயி உட்பட 3 பேரி டம் ரூ.8 லட்சம் மோசடி செய்யட் பட்டுள்ள சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தனிப் படை போலீசார் தில்லி செல்லவுள் ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் பகு தியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கடன் பெறுவதற்காக வங்கி உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் செல்போன் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் அவரை தொடர்பு கொண்டு கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள ‘தனலட் சுமி லோன் லிமிடெட்’ என்ற நிறுவ னத்திலிருந்து ரூ.10 லட்சம் தருவ தாக கூறியுள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயி அந்த தனியார் நிதி நிறுவனத்திற்கு நேரில் வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், உடனடியாக நேரில் வர வேண்டாம் என்றும், கடன் தொகையை பெறுவதற்கு ஆவண கட்டணமாக ரூ.10 ஆயிரம் வாங்கி யுள்ளனர். இதையடுத்து ரூ.10 லட் சம் கடன் தொகை வழங்குவதற் கான ஆணையை தயார் செய்து அவருக்கு வாட்ஸ் - அப் மூலம் அனுப்பி உள்ளனர். ஆனால், வங்கி கணக்குக்கு பணம் வரவில்லை.
அதேசமயம், இன்சூரன்ஸ் கட்ட ணம் உள்பட பல்வேறு காரணங் களை கூறி விவசாயி-டம் இருந்து ஒவ்வொரு முறையும் ரூ.20 ஆயி ரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை பல் வேறு தவணைகளில் ரூ.6 லட்சத்து 72 ஆயிரத்து 810 வாங்கியுள்ளனர். ஒவ்வொரு முறையும் இந்த பணம் முழுவதும் கடன் தொகையுடன் மொத்தமாக கிடைத்துவிடும் என்று நம்பிக்கை அளித்ததால், விவசாயி யும் பணத்தை கொடுத்து வந்துள் ளார். மேலும், விவசாய கடனுக்கு குறைந்த வட்டி என்று ஆசை வார்த்தை கூறியதால், விவசாயி இவ்வளவு தொகையை செலுத்தி யுள்ளார். ஒரு கட்டத்தில் லோன் பணம் தனக்கு வந்து சேராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் நிதி நிறுவன அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அந்த செல் போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய் யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச் சியடைந்த விவசாயி உதகை குற்றப் புலனாய்வு பிரிவு காவல் நிலையத் தில் புகார் அளித்தார். இதன்பேரில் காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இதே போல் நீலகிரி மாவட்டம், உதகை யைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம், மேலும் ஒரு வாலிபரிடம் ரூ.17 ஆயிரம் என மோசடி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில், விசார ணைக்காக போலீசார் எர்ணாகுளம் சென்றபோது, குறிப்பிட்ட முகவரி யில் தனியார் நிதி நிறுவனம் எதுவு மில்லை. இதையடுத்து கூடுதல் விசாரணையில் மோசடி செய்தவர் கள் தில்லியிலிருந்து போன் செய் தும், வாட்ஸ் -அப் மூலம் தொடர்பு கொண்டு இந்த சம்பவத்தை அரங் கேற்றியது தெரியவந்தது.
தமிழகம் முழுவதும் மோசடி
இதுகுறித்து குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினர் கூறுகை யில், நீலகிரி மாவட்டத்தில் இது வரை 3 புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால், மேலும் பல ரும் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கூடிய விரைவில் நிறைய புகார்கள் வரலாம். இதே போல் கோவை, விழுப்புரம் உள்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த மோசடி நடந் துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பொதுமக் கள் இது குறித்து புகார் அளிக்க லாம். ஏற்கனவே அளிக்கப்பட்ட புகா ரின் பேரில் விசாரணை நடத்திய தில், தில்லியில் உள்ள அடையா ளம் தெரியாத நபர்கள் இந்த மோசடி செயலை அரங்கேற்றி யுள்ளனர். ஆனால், அவர்கள் சந் தேகம் ஏற்படாத அளவுக்கு, தூய தமிழிலும், சில நேரங்களில் கொங்கு தமிழிலும் பேசுகின்றனர், என்ற னர்.
தில்லி விரையும் தனிப்படை
சைபர் கிரைம் குற்றத்தை பொறுத்தவரை குற்றவாளிகளை பிடிக்க முடியாது என்ற தைரியத் தில் மோசடி செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, பணமோசடியில் ஈடுபட்ட அடையா ளம் தெரியாத நபர்களை கைது செய்வதற்காக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நிவாஸ் தலைமையில், ஆய்வாளர் பிலிப்ஸ், உதவி ஆய்வாளர் கலைவாணி உள் ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப் படை அடுத்த வாரம் தில்லிக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.