districts

img

அரசுக் கல்லூரியில் புதிதாக பாடப்பிரிவு

நாமக்கல், செப். 9-  மோகனூர் அரசு பாலிடெக்னிக் கல் லூரியில் புதிதாக பாடப்பிரிவுகளை உருவாக்க வேண்டும், அடிப்படை வசதிகள் அமைக்க வேண்டும்  என  இந்திய மாணவர் சங்கத்தினர் வலியு றுத்தி உள்ளனர்.  நாமக்கல் மாவட்ட அட்சியரிடம், இந்திய மாணவர் சங்கத்தின் ஒன்றியச்  செயலாளர் தனுஷ் தலைமையில் திங்க ளன்று அளித்த மனுவில் தெரிவித்திருப் பதாவது, நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி யில் சிஎஸ்சி, இசிஐ, மெக்கானிக்கல், இஇஇ ஆகிய நான்கு பாடப்பிரிவுக ளில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று  வருகின்றனர். நாமக்கல் மாவட்ட அரு காமையில் உள்ள மாவட்டங்களில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இல் லாததால் திருச்சி, கரூர் ,சேலம், உள் ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த வர்கள் அதிக அளவு மோகனூர் அரசு  பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நான்கு பாட பிரிவுகளைத் தவிர்த்து மற்ற பாடப்பிரிவுகளில் படிக்க  விரும்பும் மாணவ, மாணவர்கள் தனி யார் கல்லூரிகளை நாட வேண்டிய நிலை உள்ளது. எனவே அரசு கல்லூரி யில் புதிதாக பாடப்பிரிவுகளை உரு வாக்க வேண்டும், கல்லூரியில் ஆய்வ கம் இல்லாமல் மாணவர்கள் சிரமப் பட்டு வருவதால், ஆய்வக கட்டடம் புதி தாக அமைக்க வேண்டும். கல்லூரி  மாணவ, மாணவியருக்கு முறையான பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர  வேண்டும் என அதில் தெரிவித்துள் ளனர். ஆட்சியரிடம் மனு அளிக்கை யில், இந்திய மாணவர் சங்கத்தின் நாமக் கல் மாவட்டத் தலைவர் மு.தங்கராஜ் உள் ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.