districts

அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு நவீன சிகிக்சை

சேலம், ஆக.21- சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கு நவீனமுறையில் சிகிச்சை அளிப்ப தற்கு ரூ.24 கோடி மதிப்பிலான லீனி யர் ஆக்சிலேட்டர் கருவி விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு துறை கள் செயல்பட்டு வருகின்றன. இத னால் சேலம் மாவட்டம் மட்டுமின்றி  அருகில் உள்ள தருமபுரி, கிருஷ்ண கிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி உள் ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த  பொதுமக்கள் இங்கு சிகிச்சை பெற்று  வருகின்றனர். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் செயல்ப டும் புற்றுநோய் துறையில் கோபால்ட் சிகிச்சை மூலமாக எக்ஸ்ரே எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோபால்ட் சிகிச்சைக்கு தினமும் 55  முதல் 60 நோயாளிகள் வருகின்றனர். ஹீமோதெரபி சிகிச்சைக்கு ஒவ் வொரு மாதமும் சராசரியாக 450 முதல் 500 பேர் வருகின்றனர். இதை  கருத்தில் கொண்டு நோயாளிக ளுக்கு அதிநவீன சிகிச்சை சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.24 கோடி மதிப்பில் ஆக்சிலேட்டர் சிகிச்சை வசதி அமைக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் கூறுகையில், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் புற்றுநோய்க்கு ஹீமோதெரபி, ரேடியோ தெரபி,  அறுவை சிகிச்சை என மூன்று வித மான சிகிச்சைகள் அளிக்கப்படுகி றது. இந்நிலையில் புற்றுநோய்க் ்கான நேரியல் முடுக்கி (லினாக் மெசின்) சிகிச்சையானது விரைவில் துவங்க உள்ளது. இதன் கட்டுமான பணிகள் பெருமளவில் நிறைவ டைந்து விட்டது. இதில் பிரதான கரு வியின் மதிப்பு மட்டும் ரூ.18 கோடி யாகும். அதனுடன் இணைந்த உள் கதிர்வீச்சு சிகிச்சை கருவி ரூ.4 கோடி, சிடி சிமிலேட்டடு கருவி ரூ.2 கோடி என்று மொத்தம் ரூ.24 கோடியில் லீனி யர் ஆக்சிலேட்டர் சிகிச்சைக்கான கருவி பொருத்தப்படுகிறது. தற்போ துள்ள கோபால்ட் சிகிச்சையில் மூளையில் உள்ள கட்டி, கிட்னி, மூளை தண்டுவடத்தில் உள்ள கட்டி களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. ஆனால் லீனியர் ஆக்சிலேட்டரால் சிகிச்சை அளிக்க முடியும், என்ற னர்.