ஈரோடு, டிச.8- பெருந்துறை அருகே உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாதிரி சந்தை யில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண் டனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சிங்காநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சந்தைப்படுத்துதல் நிகழ்வு நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கனகராஜ் அனைவரையும் வரவேற்றார். தாய்மண் பொன்னுசாமி சிறப்புரையாற்றினார். குட்டித் துரை ரிப்பன் வெட்டியும், சின்னச்சாமி முதல் விற்பனையாக பொருளை பெற்றும் சந்தையை துவக்கி வைத்தனர். மாணவ, மாணவிகள் சந்தை கடைக்காரர் விற்ப னையில் ஈடுபட்டனர். முன்னதாக, நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்தி ருந்தனர். இறுதியாக ஆசிரியர் ரவி நன்றி கூறி னார்.