districts

img

வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, நவ.18- ஆட்சி அலுவலர் பணியிடம் அனு மதிகோரி, தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சு பணியாளர் சங்கத் தின் சார்பில், தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய மாவட்டங்களான செங்கல் பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் மயிலாடுதுறை ஆகியவற்றில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் உரு வாக்கப்பட்ட நிலையில், இந்த அலு வலகங்களுக்கு ஆட்சி அலுவலர் பணி யிடம் அனுமதிக்கப்படவில்லை.  எனவே வேளாண்மை இணை இயக் குநர் அலுவலகங்களுக்கு, தலா ஒரு  ஆட்சி அலுவலர் பணியிடம் அனும திக்க வேண்டும்.  தோட்டக்கலைத்துறை, மாவட்ட துணை இயக்குநர் அலுவலகங்க ளில் இதுவரை 17 மாவட்டங்களுக்கு மட்டுமே ஆட்சி அலுவலர் பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசால்  ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறை யாகக் கையாள்வதற்கு ஆட்சி அலு வலர் பணியிடம் அவசியம் என்ப தால், இதர அனைத்து மாவட்ட தோட் டக்கலைத்துறை துணை இயக்குநர் அலுவலகங்களுக்கும். தலா ஒரு ஆட்சி அலுவலர் பணியிடம் அனும திக்க வேண்டும். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அமைச்சுப் பணியிடம் அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வேளாண்மைத் துறை அமைச்சு பணியாளர் சங்கத் தினர் தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங் கத்தின் மாநிலச் செயலாளர் ஜெய வேல் தலைமை வகித்தார். மாவட்ட  பொருளாளர் அண்ணாதுறை கோரிக் கையை விளக்கி பேசினார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் ஏ.சேகர், மாவட்ட பொருளா ளர் கே.புகழேந்தி, வட்டக்குழு தலை வர் குமரன், தமிழ்நாடு பொது நூல கத்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர்.