districts

img

கனவு இல்ல திட்ட வீடுகள்: அமைச்சர்கள் வழங்கினர்

திருப்பூர், ஆக.8 - திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றி யப் பகுதியில் ரூ.5.97 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கனவு  இல்ல திட்ட வீடுகளை அமைச்சர்கள் வியாழனன்று பயனா ளிகளுக்கு வழங்கினர்.  திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றி யம், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி, கொங்குநகர் பாலாஜி மஹாலில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் காங்கேயம், வெள்ளகோவில் மற்றும்  மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 175 பயனாளிக ளுக்கு ரூ.5.97 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லத் திட்ட வீடுகள், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட் டப் பணிகளுக்கான  ஆணைகளை தமிழ் வளர்ச்சி மற்றும்  செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவி டர் நலத்துறை அமைச்சர என்.கயல்விழி செல்வராஜ் ஆகி யோர் வியாழனன்று வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி 4ஆம் மண்டலத் தலைவர் இல. பத்மநாபன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்  அரசன், காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி, ஊரக வளர்ச் சித்துறை உதவி செயற்பொறியளர் அழகுராஜா, காங்கே யம் வட்டார வளர்ச்சி அலுவலர் அனுராதா, வெள்ளகோ வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராகவேந்திரன், மீனாட்சி, மூலனுார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த  அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.