districts

img

மக்களுடன் முதல்வர் திட்டம்: அமைச்சர் ஆய்வு

திருப்பூர், ஆக.8- மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்று  வரும் முகாமினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழனன்று பார்வை யிட்டார். திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றி யம், மேட்டுப்பாளையம் ஊராட்சி, நாட்ராயன் கோவில் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்  கீழ் நடைபெற்று வரும் முகாமினை தமிழ் வளர்ச்சி மற்றும்  செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழ னன்று பார்வையிட்டு, பொதுமக்கள் கணினி மூலம் பதிவு  செய்த கோரிக்கை மனுக்களுக்கான ஒப்புகை சீட்டுக் களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ்,  காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி, வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராகவேந்திரன், மீனாட்சி,  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்பு டைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.