ஈரோடு, ஆக.2- இந்தியாவில் விளையாட்டுத் துறை என்றால் ‘தமிழ்நாடு’ தான் என்ற அளவிற்கு, புது புது முயற்சி கள் எடுக்கப்பட்டு வருகிறதென, ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழா வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதமாக தெரிவித்துள்ளார். ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத் தைச் சேர்ந்தவர்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மற் றும் பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங் கும் நிகழ்வு, ஈரோடு அருகே உள்ள ஆர்.என்.புதூர் பிளாட்டினம் மஹா லில் வெள்ளியன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பேசுகையில், ஈரோடு மாவட் டத்திற்கு ஒவ்வொரு முறையும் வரும் பொழுது ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். அதற்கு காரணம், இது தந்தை பெரியார் பிறந்த மண். அத் தகைய ஈரோடு மாநகரில் முத்தமிழ றிஞர் கலைஞர் பெயரில், விளை யாட்டு உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப் படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 383, கரூர் மாவட்டத்தில் 250 எண்ணிக் கையிலான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின் றன. மேலும், பல்வேறு அரசு துறை கள் சார்பில் 4 ஆயிரத்து 503 பயனா ளிகளுக்கு ரூ.21 கோடியே 72 லட் சத்து 90 ஆயிரத்து 638 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப் படுகின்றன. உலக சாம்பியன் ஷிப் போட்டி யில் வெண்கலப் பதக்கம் பெற்ற பாரா பேட்மிட்டன் வீரர் ரித்திக் ரகு பதியின் வெற்றி பயணம் இந்த ஈரோடு மாவட்டத்தில் இருந்து இன் னும் பல விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும். அதேபோல் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபால் வீராங்கனை ஜெ. மகேஸ்வரி, சர்வதேச அளவில் முத் திரை பதித்து வருகிறார். இந்த இரு வரும் இங்கு வந்துள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக, உந்து சக்தியாக திகழ்கின்றனர். தமிழ்நாடு சாம்பி யன்ஷிப் அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் ஏராளமான ஏழை, எளியோர் மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது. முதல்வரின் ஆணைக் கிணங்க 600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.14 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் அரசு விளை யாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என உங்களை போன்ற பல வீரர்கள் கோரிக்கை வைத்துள் ளனர். முதலமைச்சரின் சீரிய நடவ டிக்கையால் முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பினை வழங்க உத் தரவிட்டுள்ளார். இந்தியாவில் விளையாட்டுத் துறை என்றால் அது தமிழ்நாடு தான் என்ற வகையில், தொடர்ந்து புது புது முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மக்களின் கோரிக் கைகளை நிறைவேற்றுவது தான் இந்த அரசினுடைய கடமை. நம்மு டைய முதலமைச்சரைப் பொறுத்த வரை தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசினுடைய ஒவ் வொரு சேவையும் சென்றடைந்து, ஒவ்வொரு தனிநபரும் அரசால் பயன்பெற வேண்டும் என்று தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற் றம், தரமான கல்வி, சுகாதாரம் உள் ளிட்ட துறைகளில் தமிழ்நாடு இந் தியாவிலேயே முதலிடத்தை பிடித் துள்ளது. இதனை ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பு புள்ளி விப ரத்துடன் தெரிவித்துள்ளது. எனவே, இந்த திட்டங்களின் பயனா ளிகள் என்ற அளவில் இல்லாமல் அவற்றின் பங்கேற்பாளர்கள் என்ற உணர்வோடு நீங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார். இந்நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர் கள் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன், மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், அரசு கூடு தல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மாவட்ட ஆட்சி யர் ராஜகோபால் சுன்கரா, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், ஈரோடு மாநகராட்சி ஆணையர் நார ணாவாரே மனிஷ் சங்கர்ராவ் உட் பட பலர் கலந்து கொண்டனர்.