districts

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் அமைச்சர் நழுவல்

நாகர்கோவில், ஜூன் 23- கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக உள்ள ரப்பர் உற்பத்தியில் தனியாரும் அரசு ரப்பர் கழகமும் முக்கிய பங்கு வகிக்கின் றன. குறிப்பாக அரசு ரப்பர் கழ கத்திற்கு சொந்தமான ரப்பர் தோட் டங்கள் கோதையாறு, மைலார், காளிகேசம், கீரிப்பாறை உள்பட 8 மண்டலங்களில் செயல்பட்டு வரு கின்றன. இவற்றில் கீரிப்பாறை, மைலாரில் அரசு ரப்பர் கழக தொழிற் சாலைகள் உள்ளன. இங்குள்ள அரசு ரப்பர் தோட்டத்தில் பால்வடிப்பு உள்ளிட்ட பணிகளில் 2,500 க்கும் மேற்பட்ட தொழிலாளிகள்பணிபுரி கின்றனர்.  கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ரப்பர் தோட்டதொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுஒப்பந்தம் நிறை வடைந்தது. ஊதிய உயர்வுகோரி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்ட னர்.  இதையடுத்து கடந்த ஆண்டில் இடைக்கால ஊதிய உயர்வாக நாள் ஒன்றுக்கு 23 ரூபாய் உயர்த்தியது. இந்நிலையில் இடைக்கால ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை ஒப்பந் தத்தை இறுதி பேச்சு வார்த்தை யாக மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதை கண்டித்தும் நியா யமான ஊதிய உயர்வு கோரிக்கை யை நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்துதொழிற்சங்க தொழிலா ளர்கள் தொடர்வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ரப்பர் தோட்ட தொழிற்சங்கங்கள் தமி ழக அரசுடன் 37 முறைக்கு மேல் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த உடன் பாடும் ஏற்படவில்லை.  இந்நிலையில் ஞாயிறன்று ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை அரசு ரப்பர் தோட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இதில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்து சென்று நடவடிக்கைகள் எடுக் கப்படும் என்றும் சட்டசபை கூட்ட தொடரில் இதுதொடர்பாக விரிவான விவாதங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அரசு ரப்பர் கழகத்தில் தற் போதுள்ள அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்தும் உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்படும் என அமைச்சர் சீனிவாசன் உறுதி அளித்த தாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரி வித்தனர். தொழிற்சங்க பிரதிநிதி களான சிஐடியு நிர்வாகி வல்சகுமார், தொமுச நிர்வாகி இளங்கோ, ஐஎன்டி யுசி நிர்வாகி அனந்தகிருஷ்ணன், ஜனதாதளம்(எஸ்) நிர்வாகி ஞான தாஸ் உள்ளிட்டோர் அமைச்சர் சீனி வாசனை சந்தித்து பேசினர். அமைச்சரை சந்திக்க தொழிற் சங்க நிர்வாகிகளுக்கு காலை 10 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இதனால் நிர்வாகிகள் அனைவரும் அமைச்சரை சந்திக்க காலம் தாழ்த்தா மல் வந்தனர். ஆனால் ஆய்வு கூட்டம் காலை 11 மணிக்கு தான் துவங்கியது. காலை 10 மணிக்கு வந்து காத்திருந்த தொழிற்சங்க நிர்வாகிகள் சுமார் 2.5 மணி நேரத்துக்கு பின்னர் அமைச் சரை சந்தித்தனர். இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.