திருப்பூர், ஜன.24 - சமுதாயத்தில் புத்தக வாசிப்பு பழக் கம் அதிகரித்தால், மக்கள் வாழ்க்கை மேம்படும் என்று மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் கூறினார். திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப் பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத் தும், 21 ஆவது திருப்பூர் புத்தக திரு விழாவை வியாழனன்று தொடங்கி வைத்த மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழா பேருரை ஆற்றுகை யில் கூறியதாவது: புத்தக வாசிப்பு பழக்கம் வாழ்க் கையை மேம்படுத்தும். ஆரோக்கியம் குறித்த புத்தகங்களை வாசித்தால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம், பல்வேறு தலைப்பில் உள்ள புத்தகங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடியவையாக இருக்கின் றன. ஆரம்பத்தில் சில பதிப்பகங்களு டன் தொடங்கப்பட்ட இந்த கண்காட்சி தற்போது 60க்கும் மேற்பட்ட வெளி யீட்டாளர்களுடன் 150 அரங்கங்கள் கொண்டு நடத்தப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டில் மதுரையில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. கோவை யில் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட் டுள்ளது. சமுதாயத்தில் புத்தக வாசிப்பு பழக்கம் மேம்பட வேண்டும் என்று கூறி னார். மாநில மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வ ராஜ் பேசுகையில், சிறுவர்கள், குழந் தைகள் செல்போன் பார்க்கும் பழக் கத்தில் இருந்து விடுபட புத்தக வாசிப்பை பழக்க வேண்டும். அனை வரும் புத்தகங்களை வாங்கி வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும். புத்தகங்கள் நம் வாழ்வை மேம்படுத்துகின்றன என்று கூறினார். முன்னதாக வரவேற்புரை ஆற்றிய பின்னல் புக் டிரஸ்ட் நிர்வாகி ஆர்.ஈஸ்வ ரன் கூறுகையில், திருப்பூர் புத்தகத் திரு விழா மூலம் திருப்பூர் மாநகரில் புத்தக வாசிப்பு இயக்கம் மக்களிடம் வேரூன்றி இருப்பதை அறிய முடிகிறது. தமிழக அரசு அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை மலிவுப் பதிப்பாக வெளி யிட்டால் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் ஏராளமாக வாங்கி படிக்க முடியும். அத்துடன் பள்ளிப் பாடத்திட் டத்திலும் அரசியலமைப்பு சட்டம் குறித்த விரிவான பாடப்பிரிவை சேர்க்க வேண் டும். இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசியலமைப்பு;ச சட்டத்தை பாதுகாக் கும் பெரும் படை உருவாக முடியும் என்று அவர் கூறினார். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தலைமை உரையாற்றுகையில், திருப்பூர் புத்தகத் திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வரு கிறது. திருப்பூர் மக்கள் தொடர்ந்து ஆத ரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், புத்தகத் திரு விழாவிற்கு மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வரு கிறது. இப்புத்தகத் திருவிழாவை சிறப் பாக நடத்தி வருவதற்கு அனைவருக் கும் நன்றி தெரிவித்தார். இந்த விழாவில் துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, பின்னால் புக் ட்ரஸ்ட் நிர்வாகிகள் அ.நிசார் அகமது, கே.காமராஜ், புத்தகத் திருவிழா நிர்வா கிகள் அரிமா ஜீவானந்தம், மோகன் கார்த்திக் உள்பட புத்தகத் திருவிழா ஆர் வலர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். திருப் பூர் மாவட்ட நூலக அலுவலர் பெ. கார்த்திகேயன் நன்றி தெரிவித்தார். சென்னை புத்தகத் திருவிழாவின் தொடர்ச்சியாக திருப்பூரில் நடத்தப் படும் இந்த புத்தகத் திருவிழாவில் அண்மையில் வெளியிடப்பட்டிருக் கும் பல புதிய புத்தகங்கள் இடம் பெற் றுள்ளன. புத்தக அரங்கங்களின் ஊடாக அரசு நிர்வாகத்தின் சேவை குறித்த விபரங்க ளும் தனித்தனி அரங்கங்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புத்த கத் திருவிழாவின் சிறப்பு அம்சமாக, சிந்து வெளி நாகரிகத்தின் மாதிரி காட்சி வடிவமைப்பு தனியாக உருவாக்கப்பட் டுள்ளது. சிந்துவெளி நாகரிகத்தின் தனித்துவ அடையாளமாக திகழும் திமில் உள்ள காளை, சுட்ட செங்கற் களால் கட்டப்பட்ட நீச்சல் குளத்தின் மாதிரி வடிவம் ஆகியவை நேர்த்தியு டன் அமைக்கப்பட்டு உள்ளன. இவை பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து தற்படம் (செல்பி) எடுக்க வைக்கிறது.