districts

img

காரணம்பேட்டை பேருந்து நிலையத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

திருப்பூர், நவ.7-                                                               திருப்பூர் மாவட்டம் பல்ல டம் ஊராட்சி ஒன்றியம், கார ணம்பேட்டை பேருந்து நிலை யத்தை தமிழ் வளர்ச்சி மற்றும்  செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் செவ்வா யன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  கோடாங்கிபாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள காரணம்பேட்டை பேருந்து நிலையம் கடந்த  2015 ஆம் ஆண்டு கட்டப்பட்டு பொதுமக்க ளுக்கு பயன்படாமல்  பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போதுவரை பயன்ப டாமல் உள்ள இந்த பேருந்து நிலையத்தை பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் மாற் றிட நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற் கொண்டார். மேலும், இது தொடர்பாக சமந் தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி களுடனும், அரசு அலுவலர்களுடனும்  கலந்து ஆலோசனை செய்து பேருந்து நிலை யத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர்  தா.கிறிஸ்துராஜ், பல்லடம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பாலசுப்பரமணியம், பல் லடம் வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார், சமாளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி, கோடாங்கிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் காவீ.பழனிச்சாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.