சேலம், ஜன.14 - புதிய பேருந்து வழித் தடத்தை நகர்ப்புற உள் ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கன்னங் குறிச்சி பகுதியில் சனியன்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சேலம் மாநகரத்தில் பேருந் துகள் இயக்கப்பட்டு வரு கிறது. சேலம் அடிவாரம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவர்களின் பயன் பாட்டிற்கு போதிய பேருந்து வசதி இல் லாததை தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்து களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேலம் அடிவாரம் கன்னங்குறிச்சி வழியாக புதிய பேருந்து வழித்தடத்தை அமைச்சர் கே.என்.நேரு கன்னங்குறிச்சி பகுதியில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.