districts

img

அரசு விடுதிகளில் அமைச்சர் கயல்விழி ஆய்வு

தருமபுரி, செப்.2- தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசு விடுதி களில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் விடுதிகளில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் திங்களன்று ஆய்வு செய்தார். பழுத டைந்து, தனியார் கட்டிடத்தில் தற்காலிகமாக காரிமங்கலம் அரசு ஆதிதிராவிடர் நல மாண வியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இவ் விடுதி புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்ட  மதிப்பீடு தயார் செய்து அனுப்ப அலுவலர் களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். ஒட்டப் பட்டி டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாண வர் விடுதியில் மாணவர்கள் தங்கும் அறை, நூலகம், சமையலறை, உணவருந்தும் அறை யில் மாணவர்களுக்கு வழங்க சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுகளின் தரம் குறித்து பரிசோதித்தார். உணவினை தரமாக வும் சுகாதாரமாகவும் வழங்க காப்பாளருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி, காவல் கண்காணிப்பாளர் மகேஸ் வரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி நகர் மன்றத் தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) செம்மலை, பழங்குடியினர் நல மாவட்டத் திட்ட அலுவலர் கண்ணன், ஆதிதிராவிட நலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.