districts

img

சீரமைக்கப்பட்ட 144 தொகுப்பு வீடுகள் அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

உதகை, நவ.7- மசினகுடியில் மறு சீரமைக்கப்பட்ட 144 தொகுப்பு வீடு களை தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட் பட்ட மசினகுடி ஊராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பில் மின் விளக்குகளுடன் மறுசீரமைப்பு செய்யப்பட்ட 144 தொகுப்பு வீடுகளை தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் திறந்து வைத்தார். இதைத்தொடா்ந்து, ராயல் என்பீல்டு நேட் டிவ் கேர் அறக்கட்டளை சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்ட அறிவிப்பு பலகையையும் அமைச்சர் கா.ராமச்சந்தி ரன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அம்ரித், மாவட்ட  ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெயராமன், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரி ராஜீவ் சர்மா, கூட லூர் நகராட்சி தலைவர் பரிமளா, மசினகுடி ஊராட்சி தலைவர் மாதவி, துணைத்தலைவர் நாகேஷ், ஓவேலி பேரூராட்சி மன்ற  தலைவர் சித்ராதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.