தாராபுரம், அக்.20- தாராபுரத்தில் ரூ.24 கோடி மதிப்பில் கட் டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடப் பணிகளை தமிழ்நாடு ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தமிழ்நாடு ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கூறிய தாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார் பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல் படுத்தி வருகிறார். அந்த வகையில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப் பட்டு வரும் கூடுதல் கட்டடப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் தாராபுரம் அரசு மருத் துவமனையில் கூடுதல் கட்டிடம் ரூ.24 கோடி மதிப்பில் 4 தளம் கொண்டு கட்டப்பட்டு வரு கிறது. தரைத்தளத்தில் வரவேற்பறை, கதிரி யக்க அறை சி.டீ ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறை ஆய்வகம் 2 எண்ணிக்கையி லும், அல்ட்ரா கதிர்வீச்சு அறை வெளிப்புற நோயாளிகளுக்கான இருதய சிகிச்சை அறை மற்றும் மருந்தக இருப்பு அறைகளும், முதல் தளத்தில் டயாலிசிஸ் வார்டு பணி மருத்துவர் அறை. பணி செவிலியர் அறை. தீவிர சிகிச்சை பிரிவு பதிவறை, மருந்து இருப்பு அறை, சாய்தளம் கழிவறை வசதிகளுடனும், இரண் டாம் தளத்தில் அறுவை அரங்கு 2ல் நோயா ளிகள் அறுவை சிகிச்சைக்கு தயார் படுத்தும் அறை, பணி மருத்துவர் அறை பணி செவிலி யர் அறை, கழிவறை மற்றும் சாய்தளவசதிக ளுடனும். மூன்றாம் தளத்தில் பெண்களுக் கான மருத்துவசிகிச்சை பிரிவு மற்றும் அறு வைசிகிச்சை பிரிவு (எலும்பு பிரிவு) ஆண்க ளுக்கான அறுவை சிகிச்சை வார்டு மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறைகளும், நான்காம் தளத்தில் ஆண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு (எலும்பு பிரிவு பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர்அறை, பணி செவி லியர் அறை, பொது கழிவறை வசதிகளு டனும் ஐந்தாம் தளத்தில் குழந்தைகளுக்கான பிரிவு, காப்பீடு திட்ட பிரிவு, ஆண்கள் மற் றும் பெண்கள் பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, சாய்தளம் கழிவறை வசதி களுடனும்ஆறாம் தளத்தில் கண்சிகிச்சை பிரிவு (ஆண்கள் மற்றும் பெண்கள்) இரத்த வங்கி, கூட்ட அரங்கம், சாய்தளம் கழிவறை வசதிகளுடனும் கட்டப்பட்டு வருகிறது என அமைச்சர் கூறினார். ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் ராமராஜன், தாராபுரம் தலைமை அரசு மருத்துவர் சத்தியராஜ், உட னிருந்தனர்.