districts

img

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்: அமைச்சர் ரா.ராஜேந்திரன் பங்கேற்பு

சேலம், அக்.29- சேலம் மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு பயிலும் 26,274 மாணாக்கர்களுக்கு ரூ.12.43 கோடி மதிப்பிலான விலை யில்லா மிதிவண்டிகளை அமைச்சர் ரா.ராஜேந்திரன் வழங்கினார். சேலம் மாவட்டத்தில் 2024 – 25 ஆம்  கல்வியாண்டிற்கான விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி, பனமரத் துப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்ச் சியில் கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் பேசுகை யில், பல்வேறு திட்டங்கள் மூலம்  மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். அரசுப்பள்ளி மாணவ, மாணவி கள் எளிதாகவும், விரைவாகவும் பள் ளிக்கு சென்றுவர விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் 2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா  மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ்,  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக ளில் 11 ஆம் வகுப்பு பயிலும் 11,726 மாண வர்களுக்கும், 14,548 மாணவிகளுக்கும் என மொத்தம் 26,274 மாணாக்கர்களுக்கு ரூ.12.43 கோடி மதிப்பிலான விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கும் வகை யில் இத்திட்டம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவ லிங்கம், சேலம் வருவாய் கோட்டாட்சியர் அ.அபிநயா, பேரூராட்சித் தலைவர்கள் லதா, கே.வி.பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.