கோவை, ஏப்.15- ஒண்டிபுதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதியளித்தார். கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர் சூர்யா நகர் சுற்றுவட்டார பகுதியில் 1000க்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் கடவு எண் 3ல் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரு கின்றனர். 10 ஆண்டுகாலமாக இந்த கோரிக்கை இருந்து வரும் நிலையில், இதுவரை நிறை வேற்றப்படவில்லை. இந்த நிலையில், தமி ழக அரசு இப்பகுதியில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விடம் கோரிக்கை மனு அளித்தனர். மனு வினை பெற்றுக் கொண்ட அமைச்சர் பாலம் கட்ட துரித நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்வின் போது, திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திக், பகுதிச் செய லாளர் எஸ்.எம்.சாமி, சிவலிங்கபுரம் குடியி ருப்போர் நல சங்க ஒருங்கிணைப்பாளர் வி. தெய்வேந்திரன், தலைவர் எஸ்.சொக்கலிங் கம், செயலாளர் சுப்ரமணி மற்றும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.