districts

img

பள்ளிக்கு பலர் நன்கொடை: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

கோவை, பிப்.23- மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் பள்ளிகளுக்கு நன்கொடை கொடுத்ததை போல, நிறைய பேர் நன்கொடை  கொடுக்க முன் வருகின்றனர் என பெற்றோர்களுக்கான மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலேயே அதார் பதிவு செய்யும் திட்டம் துவங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தி ருந்த நிலையில், தமிழகத்திலேயே முதன் முறையாக கோவை காளப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும்  மாணவர்களுக்கு, பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும்  திட்டத்தினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.  இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு முழுவதும்  உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கார்டு பெறுவ தற்கான விண்ணப்பங்கள் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கான சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், அவர்களது பெற்றோரின் வருமான சான்றிதழ் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய  அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு  மாத காலத்தில் அதற்கான வசதிகள் பள்ளிகளிலேயே ஏற்ப டுத்தி தரப்படும் என்றார். பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெற்றோர்களுக்கான மாநாடு நடத்தப்படுகிறது. அந்த வகையில் நான்காவது பெற்றோர்  மாநாடு கோவையில் நடத்தப்பட்டது. இதில் கோவை மட்டு மின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த  பலர் கலந்து கொண்டனர் என தெரிவித்தார். மேலும், மதுரையை சேர்ந்த ஆயி பூரண அம்மாள் பள்ளிக ளுக்கு நன்கொடை கொடுத்ததை போல, நிறைய பேர் நன்கொடை கொடுக்க முன் வருகின்றனர். நன்கொடை தந்த வர்களை அழைத்து கவுரவிக்கப்படுவதின் வாயிலாக  அவர்கள் மகிழ்ச்சி அடைவது எங்களை ஊக்கப்படுத்து கிறது. பல பேர் 1 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை நன்கொ டையாக வழங்க பத்திரங்களை கொடுத்து சென்றுள்ளனர்.  கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட் டத்தில் மட்டும் இதுவரை அரசு பள்ளிகளுக்கு ரூ. 448 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அடுத்ததாக காஞ்சிபுரத்தில் 5ஆவது பெற்றோர் மாநாடு நடை பெற உள்ளது என்றார்.