உடுமலை, அக்.9- பஞ்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளமாக நாள் ஒன்றிற்கு ரூ.544 வழங்க வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி சிஐடியு பஞ்சா லைத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள ஊதி யம் நாள் ஒன்றுக்கு ரூ.544 வழங்க வேண் டும். இந்த ஆண்டிற்கான போனஸ் தொகையாக குறைந்தபட்சம் 12 சத விகிதம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ காலவரையை 2014 க்கு முன்,பின் என்ற விதியை நீக்க வேண்டும். கடந்த 23 ஆண்டு காலமாக நிலுவையிலுள்ள பஞ்சாலைத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சனையை புதிய சம்பள நிர் ணயக்குழு மூலமாக விரைவில் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை, போடிபட்டி திருமூர்த்தி மில் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு பஞ் சாலைத் தொழிலாளர் சங்கத்தின் மாவட் டத் தலைவர் கே.பழனிசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சி. ஈஸ்வரமூர்த்தி, மாவட்டச் செயலாளர் எம்.செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர் எ.சண்முகம், மாவட்டப் பொருளாளர் எஸ்.ஜெயபிரகாஷ் மற் றும் போடிபட்டி ஆனந்தகுமார் ஆகி யோர் உரையாற்றினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.