districts

img

குறைந்தபட்ச ஆதார விலை - விவசாயத்தை பாதுகாக்கலாம்

இந்தியாவில் 67 சதவீதம்  நில உடமையாளர்கள் 10 ஹெக்டருக்கும் குறைவான நிலம் உள்ள சிறு விவசாயி களாக உள்ளனர். அதனால் இவர்கள் உற்பத்தியான பொருட்களை நீண்ட நாட் கள் இருப்பு வைத்து பேரம் பேசி விற்கும் சூழல் ஏற்படுவ தில்லை. இந்தியாவில் கிராமப் புற விவசாய பொருட்களின் சந்தை மோசமான நிலையி லேயே காணப்படுகிறது. தரமான நீடித்த உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் விவசாயிகள் உள்ளூர் வியாபாரிகளிடமும், தரகர்களிடமும் விவசாயப் பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைதான் காணப்படுகிறது.   குறிப்பாக, கிராமப்புற பகுதிகளில் விவசாய சேமிப்பு கிடங்கு வசதியில்லாத சூழலில் விவசாயிகள் அறுவடை முடிந்தவுடன் வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தையில் விற்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதிக மூலதனம் தேவைப்படுகிற தொழில்களில் ஒன்றான வேளாண்மை, அதில் காணப்படும் விலை ஏற்றத் தாழ்வுகளால் அதன் மூலதனம் நசுக்கப்படுகிறது. ஆகவே, குறைந்தபட்ச ஆதாரவிலை என்பதை அனைத்து வேளாண் உற்பத்தி பொருட்களுக்கும் விரிவுபடுத்துவது மூலம் விவசாயத்தை தற்போதுள்ள நிலையிலிருந்து ஓரளவு லாபம் பெறும். மூலதனத்தை கபளிகரமாக்காத சூழல் உருவாக வாய்ப்பு ஏற்படும்.  

இளம் விவசாயி கனகராஜ்  M.A.,M.Phil., B.Ed.,  நெகமம்