கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் அரியப்பம்பாளையம் பால் சொசைட்டி முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் கே.எம்.விஜயகுமார், மாவட்ட பொருளாளர் செல்லி கவுண்டர், விவசாயிகள் சங்கத்தின் சத்தி தாலுக்கா தலைவர் பி.கணேஷ், செயலாளர் பி.வாசுதேவன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.