districts

img

மெர்கண்டைல் வங்கியின் ஊழியர் விரோதப்போக்கு!

வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம், நவ.13- ஊழியர் விரோத போக்கில் ஈடு படும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி யின் நிர்வாகத்தை கண்டித்து, வங்கி  ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங் கத்தின் தூத்துக்குடி மாவட்ட பொதுச் செயலாளர் விக்னேஷ் மற்றும் தலைவர் பிரபாகர் ஆகியோர் தொழிற்சங்க நடவ டிக்கைகளில் ஈடுபட்டமைக்காக, தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாகம் இருவரையும் பணியிடை நீக்கம்  செய்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை களில் ஈடுபடக்கூடாது எனக்கூறி, ஊழி யர் விரோதப்போக்கில் வங்கி நிர்வாகம்  ஈடுபட்டு வருகிறது. எனவே, தமிழ்நாடு  மெர்கண்டைல் வங்கியின் நிர்வாகத் தின் ஊழியர் விரோதப்போக்கை ஒழிக்க  வேண்டும். தொழிற்சங்க விரோதப் போக்கை கண்டித்தும், சங்கத்தின் தலை வர்களின் பணியிடை நீக்கத்தை திரும் பப்பெற வேண்டும். பனி மூப்பு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், தமிழ் நாடு வங்கி ஊழியர் சம்மேளனம், சேலம் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஊழி யர் சங்கத்தினர் இணைந்து புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வங்கி  ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலை வர் மீனாட்சி தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் பொதுச்செயலாளர் சம்பத், இணைச்செயலாளர்கள் விமல்ராஜ், ஸ்ரீதர், ஓய்வுபெற்றோர் ஒருங்கிணைப் புக்குழு தலைவர் சுவாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.