ஈரோடு, மார்ச் 23- இந்திய விடுதலை போராட்டத்திற் காக உதிரம் சிந்தி, உயிரை கொடுத்த மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு தினம் தமிழ் நாட்டில் வியாழனன்று எழுச்சியோடு அனுசரிக்கப்பட்டது. ஈரோடு தாலுகா கமிட்டி, 60 ஆவது வார்டில் அனுசரிக்கப்பட்டது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.ராஜா, வெண்டி பாளையம் கிளைச்செயலாளர் ஆர். மாரிமுத்து, வீரபாண்டியன் மற்றும் இந் திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கள் திரளானோர் பங்கேற்றனர். நாமக்கல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக பள்ளிப்பாளையத்தில் விடு தலை போராட்ட வீர்ர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இதில், வாலி பர் சங்க ஒன்றிய செயலாளர் நவீன் உள் ளிட்ட திரளான இளைஞர்கள் பங்கேற் றனர்.
சேலம்
இதேபோன்று, இந்திய மாணவர் சங்கம் சார்பாக சேலம் அரசு கலைக் கல்லூரியில் விடுதலைப் போராட்ட தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மாணவர் சங்க மாவட்ட தலை வர் அருண்குமார், இணை செயலாளர் டார்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேலம் மேற்கு மாநகர் வாலிபர் சங் கம் அரியாக்கவுண்டம்பட்டி கிளையின் சார்பில் விடுதலை போராட்ட வீரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கிளை செயலாளர் ஜெ.ராமன் தலை மையில் நடைபெற்ற நிகழ்வில், வாலி பர் சங்க முன்னாள் மாவட்ட நிர்வாகி பி.சந்திரன், மேற்கு மாநகர தலைவர் கோபி, முன்னாள் தலைவர் பி.பால கிருஷ்ணன், மாநகர துணை செயலாளர் சி.அரவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
தருமபுரி
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பாப்பிரெட்டிப்பட்டி வட்டக்குழு சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில், நகர கிளை செயலாளர் யுவராஜ் தலைமை ஏற்றார். இதில், வாலிபர் சங்க வட்ட செயலாளர் குப்பன் வட்ட பொரு ளாளர் கார்த்திக், துணைத்தலைவர் முனியப்பன், துணைச்செயலாளர் குற ளரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கோவை
கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர் சங் கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் அசாருதீன், மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆசாத், மாவட்டக்குழு உறுப்பினர் கள் கௌசல்யா, குமரன், ஹரீஷ் உட்பட திரளான மாணவர்கள் கலந்து கொண்ட னர். முடிவில், யுவராஜ் நன்றி கூறி னார். அன்னூர், 6 ஆவது வார்டு பகுதி யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் விடுதலை போராட்ட வீர்ர்க ளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட் டது. இதில், ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். தேச விடுதலைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மாவீரர்களின் நினைவு தினம் நூற்றுக்கணக்கான மையங்களில் எழுச்சியோடு நடைபெற் றது. இதில், ஒன்றுபட்டு நின்று, உதிரம் சிந்தி, உயிரை தந்து போராடிப்பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்போம், பாசிச சக் திகளை விரட்டியடிப்போம், மதவெ றியை மாய்ப்போம், மனிதநேயம் காப் போம் என்கிற உறுதிமொழி ஏற்கப் பட்டது.