தருமபுரி, ஜன.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் இரா.சிசுபாலனின் தந்தை கே.வி. ராஜி (94) வயது முதிர்வின் காரணமாக காலமானார். தருமபுரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.சிசுபாலனின் தந்தை ராஜி, வயது முதிர்வின் காரணமாக திங்களன்று காலமானார். வேலாம்பட்டி கிரா மத்தில் வைக்கப்பட்ட இவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். இதில், கட்சியின் மாநிலக்குழு உறுப் பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயலாளர் ஏ.குமார், முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன், திமுக ஒன்றிய செயலாளர் இ.டி.டி.செங்கண்ணன், திமுக ஆதிதிராவிடர் நல மாநில துணைச்செயலாளர் செ.ராஜேந்திரன், தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் காசி.தமிழ்கும ரன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.