districts

img

வேலை நிறுத்தம், சிறை நிரப்பும் போராட்டம்

திருப்பூர், பிப்.15- தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் மக் களைத் தேடி மருத்துவ ஊழியர்க ளுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கக்கோரி வேலை நிறுத்தம்  மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ளதாக, மக்களைத் தேடி  மருத்துவ ஊழியர்கள் சங்க மாநில நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவ ஊழி யர்கள் சங்கம் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சனியன்று, திருப்பூரில் தியாகி பழனிசாமி நினைவகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பொதுச்செயலாளர் டி.லட் சுமி, திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ்.மகாலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன், மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, செயலாளர் கே.ரங்கராஜ் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.  இதில், தமிழ்நாடு அரசின் சுகா தாரத் துறையின் கீழ் மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்கள் 13  ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். தற்போது இவர்களுக்கு கடும் பணி  சுமை உள்ளது. 2 மணி நேரம் வேலை என பணியமர்த்திட்டு, 8 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்குகின்றனர். மேலும், மாத ஊதியம் ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கக்கோரி பல கட்ட  போராட்டங்கள் நடத்தியும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மருத் துவ அலுவலர்கள் (M.O), திட்ட  அலுவலர்கள் (P.O), துணை திட்ட  அலுவலர்கள் (A.P.O) உள்ளிட் டோர் பெண் பணியாளர்கள் மீது ஒடுக்குமுறை நிகழ்த்துகின்றனர். இதுகுறித்து கடந்த ஜன.25 ஆம் தேதி சுகாதார இயக்குநர், மகளிர் மேம்பாட்டு ஆணைய இயக்குநர், தேசிய சுகாதார பணி இயக்குநர் ஆகியோருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த தீர்வும் ஏற்படா ததால், விரைவில் வேலை நிறுத் தம், சிறை நிரப்பும் போராட்டம் நடத் தப்படும். பெண்கள் மீது நடத்தப்ப டும் பாலியல் வன்முறைகளை தடுக்க முறையாக விசாகா குழு  அமைக்க வேண்டும். உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம் சங் தொழிலாளர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.