கோவை, நவ.5- மேம்பாலங்களுக்கு அடியில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதி காரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளதாக, அமைச்சர் கே.என்.நேரு தெரி வித்துள்ளார். கோவை மாவட்டம், ஆர்.எஸ். புரம் பகுதியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செவ் வாயன்று செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது அவர் பேசுகை யில், முதல்வரின் உத்தரவிற்கிணங்க கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகு தியில் ஆய்வு செய்து வருகிறோம். பழைய அவிநாசி மேம்பாலம், செம்மொழி பூங்கா, பில்லூர் குடிநீர் 3, சாய்பாபா காலனி மேம்பாலம், குறிச்சி ஹவுசிங் யூனிட் சாலைப் பணி கள் ஆகிய பகுதிகள் மற்றும் திட் டப்பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். மழைக் காலங்களில் மேம்பாலங்களுக்கு அடியில் மழைநீர் தேங்காத வண் ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. அதன்படி, அவி நாசி மேம்பாலத்தின் கீழ் முன்பு மழை நீர் தேங்கும் நிலை இருந்தது. தற் போது புதிய மோட்டார் மற்றும் புதிய வழித்தடம் அமைக்கப்பட்டு தண்ணீர் தேங்காத நிலை உருவாக்கப்பட்டுள் ளது. இதேபோல், லங்கா கார்னர் பாலத்தில் புதிய ஜெனரேட்டர் மற் றும் மோட்டார் அமைக்கப்பட்டு தண் ணீர் வெளியேற்றப்படுகிறது. மேம் பாலங்களின் அருகே சம்ப் அமைக்க ரயில்வே துறையிடம் இடம் கேட்டுள் ளோம். இடம் கிடைத்தால் புதிய சம்ப் அமைக்கப்பட்டு மழைநீர் உடனடி யாக வெளியேற்றும் பணிகள் நடை பெறும். பில்லூர் குடிநீர் திட்டம் - 3 வந்த பிறகு 74 கி.மீ நீளப் பணிகளில் 54.8 நிறைவு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்புகள் 1.5 லட்சம் தர வேண் டும். அதில் 88 ஆயிரம் தரப்பட்டுள் ளது. 23 இடங்களில் மேல் நீர்தேக்க தொட்டி பணிகள் முடிவு பெற்றுள் ளது. சிறுவாணி நீர் குறித்து கேரளம் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரு கிறோம். கடந்த முறை கேரளம் அரசு டன் பேசிய போது, உரிய வகையில் சிறுவாணி குடிநீர் வழங்கப்பட்டது. சூயஸ் 24 மணி நேர குடிநீர் அடுத்த வருடத்திற்குள் 80 சதவிகிதப் பணி கள் முடிவடையும். சரியாக குடிநீர் வழங்கப்படுவதே முக்கியமாக உள் ளது. இதேபோல் மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக் கடை அமைக்கும் பணிகளும் சிறப் பாக நடைபெற்று வருகிறது. மழைக் காலங்களில் பாதாள சாக்கடை நடை பெறும் இடங்களில் தண்ணீர் தேங் கும் இடங்களில் பேரிகேட் அமைக்கப் பட்டு. பாதுகாப்பு உறுதி செய்யப்பட மாநகராட்சி நிர்வாகத்துக்கு வலியு றுத்தப்பட்டுள்ளது. சாக்கடைகளில் ரோபோக்களை கொண்டு கழிவு களை அகற்றுவதற்கு ஐஐடி உடன் இணைந்து பேசி வருகிறோம், என் றார்.