கோவை மாநகராட்சியின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மேயர் கல்பனா மற்றும் ஆணையர் சிவகுருநாதன் ஆகியோரிடம் சிஐடியு கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கே.ரத்தினகுமார் தலைமையில், அனைத்து தினக்கூலி தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.745 தரவேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக்கோரி மனு அளித்தனர். இதில், சங்கத்தின் நிர்வாகிகள் என்.கனகராஜ், ஆனந்தன், கே,மரகதமணி, சரண்யா மற்றும் சின்னதம்பி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.