சேலம், ஜூலை 26- மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியு றுத்தி பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி யாற்றி வரும் பதிவாளர் பொறுப்பு கோபி என்ப வர் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவியிடம் கடந்த ஞாயிறன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படை யில் பதிவாளர் (பொறுப்பு) கோபி கருப்பூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பல்க லைக்கழக பதிவாளரின் இந்த செயல் அங்கு பயி லும் மாணவிகளின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி யாக மாறி உள்ளது. உடனடியாக பதிவாளர் கோபி மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். உடனடியாக உயர்கல் வித்துறை பதிவாளர் கோபியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தினர் சேலம் பெரியார் பல்க லைக்கழக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மாணவர் சங்க மாவட்ட தலைவர் எஸ். பவித் ரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பி னர் சரவணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தேவி, மாவட்ட தலைவர் ஆர்.வைரமணி, மாவட்ட பொருளாளர் கே.பெருமா, மாவட்ட துணை செய லாளர் ஐ.ஞானசௌந்தரி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.