தோழர் பாப்பா உமாநாத் நினைவு தினம் திருப்பூர், கருவம்பாளையம் பகுதியில் செவ்வாயன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், மாதர் சங்க தெற்கு மாநகரச் செயலாளர் எஸ்.பானுமதி, தலைவர் டி.மினி, சிபிஎம் தெற்கு மாநகரச் செயலாளர் த.ஜெயபால், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜி.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.