ஈரோடு, ஜுன் 20- குழந்தைகள் மீதான வன்முறை களை தட்டிக் கேட்போம் தடுத்து நிறுத்துவோம் என மாதர் சங்கத்தி னர் நடத்திய மக்கள் சந்திப்பு பிரச் சார இயக்கம் ஈரோட்டில் நடை பெற்றது. வீடுகள், பள்ளிகள், பொது இடங்கள் என எல்லா இடங்களி லும் குழந்தைகள் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். குழந்தைகள் மிதான வன்முறை வழக்குகளில் காவல் துறை உரிய சட்டப்பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வரை தொடர் கவனம் செலுத்த வேண் டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக் கும், குடும்பத்திற்கும் நம்பிக்கை யூட்டும் வகையில் காவல் துறை யின் செயல்பாடுகள் அமைய வேண்டும். அத்துடன் 6 மாத காலத் திற்குள் வழக்கை முடிக்கும் நடை முறையை உத்தரவாதப்படுத்த வேண்டும். மேலும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடை செய்வதற் கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். ஊடகங்களில் பெண் குழந்தைகள் மீதான வன் முறை நடைபெறுகிற போது புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் குறித்த விளம்பரங்கள் அதிகமாக வேண்டும். பாலியல் நீதி என்பதை கற்றுக் கொடுக்க வேண் டும். ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். தலை வரை நியமித்து செயல்படாத ஆணையமாக உள்ள குழந்தைகள் நல ஆணையத்தை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் குழந்தை கள் மீதான வன்முறைகளை தட்டிக் கேட்போம், தடுத்து நிறுத்துவோம் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஈரோடு தாலுகா, பள்ளத்தூர் பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இதில், தாலுகாச் செயலாளர் கலா மணி தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் பா.லலிதா மற்றும் தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.