districts

img

ஈஷா-வுக்கு எதிராக மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

கோவை, நவ.23- ஈசாவிற்குள் நடைபெறும் மர்ம மரணங்களை  விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனக்கூறி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் கோவை யில் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈசா யோகா அறக்கட்டளை நிறுவனத்தின் மீது ஆரம்ப காலம் தொட்டே பல்வேறு குற்றச்சாட்டு கள் இருந்து வருகிறது. வனத்துறைக்குச் சொந்த மான நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித் தது, பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்தது, யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து பிரம்மாண் டமான கட்டிடங்கள் கட்டியது என்கிற சர்ச்சையை  தொடர்ந்து, பெண்களுக்கு மொட்டையடித்து தனி ஆடை வழங்கி ஆசிரமத்திற்குள்ளேயே வைத்தி ருப்பது; ஆசிரமத்திற்கு உள்ளேயே எரிமேடை அமைத்திருப்பது; பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் என சர்ச்சைகள் நீண்டு கொண்டு வருகி றது. ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மர்மங்களை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி, அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட முற்போக்கு அமைப் புகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்த வருகி றது. இதன்ஒருபகுதியாக, இந்திய மாதர் தேசிய சம்மேளனத் தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் ஈஷா யோக மையத்தை  கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கோவை டாடா பாத் பவர் ஹவுஸ் அருகில் நடைபெற்ற மாதர்  தேசிய சம்மேளனத்தின் தேசியச் செயலாளர் பி.பத்மாவதி  தலைமை வகித்தார். சிபிஐ மாநிலச் ெசயலாளர் இரா.முத்தர சன் துவக்கவுரையாற்றினார். இதில் மாதர் சம்மேளன மாநிலச் செயலாளர் மு.கண்ணகி, மாநிலத் தலைவர் ஜி.மஞ்சுளா உட் பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.