districts

img

பகுதிநேர நியாய விலைக்கடை திறப்பு

அவிநாசி,பிப். 7 – அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட மடத் துப்பாளையம் பகுதியில் புதிதாக பகுதி நேர  நியாயவிலைக்கடை வெள்ளியன்று திறக்கப் பட்டது.  அவிநாசி பேரூராட்சி இரண்டாவது வார்டு பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதி மக்கள் பகுதிநேர நியாய விலைக்  கடை அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதைத் தொடர்ந்து மடத்துப்பாளையம் பிள் ளையார் கோவில் வீதியில், முன்பு அமைந்தி ருந்த, தொலைக்காட்சி பெட்டி அறையில் நியாய விலைக்கடைக்கு கட்டிடம் கட்டப் பட்டது. இந்தக் கட்டிடமானது பொதுமக்கள் நிதி பங்களிப்புடன் கட்டி முடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து   பேரூராட்சித் தலை வர் தனலட்சுமி பொன்னுச்சாமி தலைமை யில், வட்ட வழங்கல் அதிகாரி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன்  நம்பி, ஒன்றியச் செயலாளர் சிவப்பிரகாஷ், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ரவி ராஜ்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.