சேலம், ஜூலை 12- ஒன்றிய மோடி அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, சேலம் மாவட்டத்தில் மாதர் சங்கத்தினர் பல்வேறு பகுதிக ளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து எரிபொருட்கள் மற்றும் எரிவாயு விலைகளை உயர்த்தி வருகிறது. கடந்த 14 மாதங்களில் 12 முறை சமையல் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது. அநியாய இந்த விலை உயர்வை கண்டித்து சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாநகரம் மேற்கு அம்மாசி நகர் பகுதியில் செயலாளர் ஜெய மாலா தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந் தரி கண்டன உரையாற்றினார். இதே போன்று சேலம் தாலுகா, மோகன் நகர் பேருந்து நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் எல்.விக்னேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் டி. பரமேஸ்வரி, சேலம் தாலுகா செயலாளர் செல்வி, மாரமங்கலத்துப்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் பூங்கோதை ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெத்த நாயகன்பாளையம், தேவேந்திர புரம் கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கிளைத்தலைவர் ஷோபனா தலைமை தாங்கினார். இதில் வட்ட தலைவர் துளசி உள்ளிட் டோர் பங்கேற்றனர். நரசிங்கபுரம் வீட்டு வசதி வாரிய கிளையில் நடை பெற்ற போராட்டத்திற்கு மணிலா தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் க.பெருமா கண் டன உரையாற்றினார். மாதர் சங்கத் தின் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராள மான பெண்கள் பங்கேற்றனர்.