உடுமலை, ஆக. 22 - கிராமப்புற ஏழை மக்கள் பயன்ப டுத்தும் வகையில் தினைக்குளம் கிரா மத்தில் சமுதாய நலக்கூடம் கட்டி தர வேண்டும் என உடுமலை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலு வலரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வியாழக்கிழமை மனு அளித்துள்ளனர். இதுகுறித்து உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திணைகுளம் நிர்வாகிகள் பவானி மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் தலைமையில் அளிக்கப்பட்ட மனு வில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியத்தின் ஜல்லிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திணைகுளம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதி மக்கள் திரு மணம் மற்றும் வீட்டு நிகழ்ச்சிகள் தனி யார் மண்டபங்களில் நடத்துவதால் அதிக செலவு ஏற்படுகிறது. இப்ப குதி மக்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்வதால், அனைவ ரும் பயன்படுத்தும் வகையில் அரசு சார்பில் சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும். மகளிர் சுகாதார கட்டிடம் கட்டித்தர வேண்டும். இப்பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியு மாக உள்ளதால் வீடுகளில் இருந்து வரும் சாக்கடை நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது., எனவே கழிவு நீர் தேங்காமல் இருக் கும் வகையில் சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும். மேலும், சாலைகளை சீரமைக்க வேண்டும். மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய நூலகம் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் செய்து தர வேண்டும் என குறிப்பிட்டிருந் தது. மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரம ணியம், தினைக்குளம் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் செய்ய வேண்டிய வேலைகள் குறித்த கோரிக்கைகள் நிறைவேற் றப்படும் என்றும், சமுதாய நலக் கூடம் கட்ட அரசு நிதியை பெற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் கனகராஜ், சிஐடியு திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜெக தீசன், மாதர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.