சேலம், நவ.6- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய மோடி அரசை கண்டித்து சேலத்தில் மாதர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஏழைஎளிய மக்கள் மீது தொடர்ந்து பொருளாதார தாக்குதலை தொடுத்து வருகிறது. அனைத்துப்பொருட்களின் விலையும் கடுமை யாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டி கைக்கு தண்ணீரில் பலகாரம் சுட்டுத்தான் கொண்டாட வேண்டும் என்பதை மோடி அரசுக்கு நினைவு படுத்தும் வகை யில், மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டம், புத்திரகவுண்டன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் ”தண்ணீரில் பலகாரம்” சுட்டு, நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். வட்டத் தலைவர் எம்.துளசி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டப் பொருளாளர் க.பெருமா, தமிழ்நாடு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க எம்.கே.ராமச் சந்திரன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் க.காளி தாஸ் மற்றும் ந.மேதினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.