சேலம், பிப்.16- மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டமைபின் சார்பில் வெள்ளி யன்று நடைபெற்ற மறியலில் கலந்து கொண்டவர் களை காவல் துறையினர் கைது செய்தனர். நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும். வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி, வேளாண் விளைப்பொருட்களுக்கு உற்பத்தி செலவில் 50 சதவிகிதம் கூடுதல் விலை வழங்கி, சட்டம் இயற்ற வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோ தாவை ரத்து செய்ய வேண்டும். வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண் டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்கு தாரை வார்க்கக்கூடாது. கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை, ரூ.600 தினக்கூலி வழங்கி, இத்திட்டத்தை நகர்ப்புற பகுதிகளுக்கும் விரிவுப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங் கள் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பிப்.16 ஆம் தேதியன்று பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெ றும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வெள்ளி யன்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு சிஐடியு சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலத் துணைத்தலைவர் திருச்செல் வம், மாவட்டத் தலைவர் டி.உதயகுமார், செய லாளர் ஏ.கோவிந்தன், ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் முனுசாமி, எச்எம்எஸ் நிர்வாகி கணே சன், எல்பிஎப் மாவட்டச் செயலாளர் பழனியப் பன், ஏஐசிசிடியு நிர்வாகி வேல்முருகன், ஏஐயூ டிசி மோகன், ஐஎன்டியுசி நடராஜன், டிடி எஸ்எப் பத்மநாபன் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். வல சையூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், சுமைப்பணி தொழிலா ளர் சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்க டபதி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண் முகராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேட்டூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் பி.இ.இளங்கோ, நிர் வாகி சி.கருப்பண்ணன் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். ஓமலூர் பகுதியில் ஐக்கிய விவசாயி கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஏ.ராம மூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு, சிபிஎம் ஓமலூர் தாலுகாச் செயலாளர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
பென்னாகரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு ஏஐடியுசி கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ஏ.சி.மணி தலைமை வகித் தார். இதில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் மணோன் மணி, வெங்கடேசன், விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் எம்.குமார், துணைச்செயலாளர் அன்பு, ஐஎன்டியுசி தர்மலிங்கம், எல்பிஎப் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டு, கைதாகினர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.ஜீவா தலைமை வகித் தார். மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்கார வேலு, எல்பிஎப் மாவட்டத் தலைவர் அன்புமணி, செயலாளர் சண்முகராஜா, ஐஎன்டியுசி மாவட் டச் செயலாளர் சிவலிங்கம், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே.மணி, மாவட்டத் தலைவர் ஏ. மாதேஸ்வரன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கே.என்.மல்லையன், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் சிவலிங்கம், யுடியுசி மாநில நிர்வாகி இ.பி.புகழேந்தி, மாவட் டச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர். முன்னதாக, பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு ஊர்வலமாக துவங்கி தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல், அரூர் ரவுண்டானா அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே. பி.பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.குமார், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுனன், பொருளாளர் சி.வஞ்சி, மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட நிர்வாகி எஸ்.கே.கோவிந்தன், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தீர்த்தகிரி, மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.மல்லிகா, கரும்பு வெட்டும் தொழிலா ளர் சங்க மாநில பொதுச்செயலாளர் இ.கே.முரு கன், விவசாய தொழிலாளர் சங்கச் செயலாளர் குமரேசன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் தங்கராஜ், பி.குமார், தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் பொன்னுசாமி, எல்பிஎப் மாவட்ட நிர்வாகி ஜே.பழனி, சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர்கள் சி.ரகுபதி, ஆனஸ்ட்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு, கைதாகினர்.
நாமக்கல்
நாமக்கல், மணிக்கூண்டு பகுதியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி தலை மையில் பெருந்திரள் மறியல் போராட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட ஆயிரத்தித் கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகு தியில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.மோகன் தலைமையில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட அனை வரும் கைது செய்யப்பட்டனர். குமாரபாளை யத்தில் இந்தியன் வங்கி முன்பு சிஐடியு, எல்பிஎப், ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்கள் பங்கேற்ற மறியல் போராட்டம் நடை பெற்றது. திருச்செங்கோடு இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அண்ணா சிலை முன்பு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆதிநாராயணன், துணைத்தலைவர் ஆர்.வேலாயுதம், பால் உற் பத்தியாளர் சங்க மாவட்டப் பொருளாளர் பி. தங்கரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ராசிபுரம், சேந்தமங்கலம், சின்னார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.