உதகை, மே 17- முதுமலை புலிகள் காப் பகத்திற்குட்பட்ட மசின குடி வனப்பகுதி ஆற்றங் கரையில் இரண்டு ஆண் யானைகள் சண்டையிட்ட காட்சிகள் சமூக வலை தலங் களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. வனத்திலிருந்து வெளியேறும் காட்டுயானைகள் அவ்வப்போது சாலைகளி லும் உலா வருவது வழக்கம். தற்போது கோடை வெயில் சுட் டெரித்து வருவதால், வன விலங்குகள் தண்ணீர் இருக்கும் பகுதிகளில் அதிகமாக உலா வருவது வழக்கமான ஒன்றா கும். இந்நிலையில், மசினகுடி அருகே மரவக்கண்டி ஆற்றில் இரு ஆண் யானைகள் தண்ணீர் தேடி வந்து ஆற்றங்கரை பகுதியில், சண்டையிட்ட காட்சியை அங்கிருந்த பொதுமக் கள் செல்போன் மூலம் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இதில் இரு யானைகளும் ஒன்றோடு ஒன்று தந்தங்களால் முட்டி தள்ளி சண்டையிட்டது. இந்த வீடியோவை தற்போது சமூக வலை தலங்களில் வைரலாகி வருகிறது.