districts

img

மாசாணியம்மன் கோவில் குடமுழுக்கு

கோவை, டிச.12- ஆனைமலை மாசாணி யம்மன் கோவில் குடமுழுக்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு,  வியாழனன்று நடைபெற் றது. இதில், பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கேற்ற னர்.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனை மலை மாசாணியம்மன் கோவில் தமிழகத் தின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக  திகழ்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களில் இருந்தும் ஆந்திரா, கேரளம் உள் ளிட்ட மாநிலங்களில் இருந்தும் இக்கோவி லுக்கு மக்கள் வந்து செல்கின்றனர். இந் நிலையில், மாசாணியம்மன் கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழனன்று குட முழுக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில், தமி ழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் பொள்ளாச்சி நாடாளு மன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மாவட்ட  ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, சார் ஆட்சி யர் கேத்தீரின் சரண்யா, டி.ஐ.ஜி, சரவண சுந்தர், சட்டமன்ற உறுப்பினர்கள், கோவில்  அறங்காவலர் முரளி கிருஷ்ணா, நகராட்சி,  பேரூராட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர் கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து ஏராளமான மக்கள் பங்கேற்ற னர். மேலும், இவ்விழாவில் 1000க்கும் மேற் பட்ட போலீசார் மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.