districts

img

புதுப்பாளையம் சாலையை செப்பனிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் நடை பயணம், ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக. 28 - ஊத்துக்குளி ஒன்றியம் புதுப்பாளையம் சாலையை செப்பனிட வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடை பயணம்,  ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக் குளி - சென்னிமலை சாலை குளத்தோட்டம்  பால் சொசைட்டி அருகில் பிரிந்து, தேனீஸ்வ ரன்பாளையம் வழியாக இச்சிப்பாளையம் ஊராட்சி புதுப்பாளையத்தை அடையும் சாலை உள்ளது. சுமார் 2 கி.மீ. தூரமுள்ள இந்த தார் சாலை மிகவும் பழுதடைந்து உள் ளது. இதை உடனடியாக சீரமைத்து புதிய  தார் சாலை அமைத்திடக் கோரி திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் நடைபயணம் மேற் கொண்டனர். புதுப்பாளையம், பாப்பம்பா ளையம் கட்சி கிளைகள் சார்பில் நடத்தப் பட்ட இந்த நடைபயண இயக்கத்திற்கு ஊத் துக்குளி தாலுகாக்குழு உறுப்பினர் ஆர்.மணி யன் தலைமை ஏற்றார். மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் ஆர்.குமார் தொடக்கி வைத்துப்  பேசினார். புதுப்பாளையத்தில் தொடங்கி தேனீஸ்வ ரம்பாளையம், குளத்தோட்டம், ஊத்துக்குளி  டவுன் வழியாக ஊத்துக்குளி ஆர்.எஸ்.சில்  உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை  5 கிலோமீட்டர் தூரம் இந்த நடைபயணம் மேற் கொள்ளப்பட்டது. இதில் பெண்கள் உள்பட  சுமார் 30 பேர் பங்கேற்றனர். ஊர்வலத்தின் நிறைவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார்,  தாலுகாச் செயலாளர் எஸ்.கே.கொளந்த சாமி, மாவட்டக்குழு உறுப்பினர், ஊத்துக் குளி 7ஆவது வார்டு உறுப்பினர் கு.சரஸ்வதி,  தாலுக்கா குழு உறுப்பினர்கள் கை.குழந்தை சாமி, ச.சசிக்குமார், டவுன் கிளைச் செயலா ளர் கே.பெரியசாமி, பாப்பம்பாளையம் கிளைச் செயலாளர் பி.சுப்பிரமணி, புதுப்பா ளையம் கிளைச் செயலாளர் சி.மூர்த்தி மற்றும் கட்டுமான சங்க நிர்வாகி மகேந்தி ரன், மாதர் கிளைச் செயலாளர் லட்சுமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஊத்துக் குளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி  அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட் டது.

இந்த மனுவில், புதுப்பாளையம் சாலை  குண்டும், குழியுமாக பழுதாகி உள்ள கார ணத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத் துக்கு உள்ளாகிறார்கள். இந்த சாலையை  வடுகபாளையம் ஊராட்சி, இச்சிப்பாளையம்  ஊராட்சி, சர்க்கார் கத்தாங்கன்னி ஊராட் சியை சேர்ந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். அத்து டன் கொடுமணல் மற்றும் ஒரத்துப்பாளையம் வரையிலான பொதுமக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே இந்த சாலையின் முக் கியத்துவம் கருதி பழுதான தார் சாலையை  சீரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தப்பட்டு வந்தது. பல முறை மனு  கொடுத்தும் இந்த கோரிக்கை நிறைவேற் றப்படவில்லை. எனவே மேலும் தாமதம்  செய்யாமல் போர்க்கால அடிப்படையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த, பழுதடைந் துள்ள இந்த தார் சாலையை உடனடியாக புதுப்பித்துத் தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.  கோரிக்கையைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், இந்த  சாலை அமைப்பதற்கு முன்னுரிமை அடிப் படையில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதி  கிடைத்தவுடன் இந்த சாலைப் பணி மேற் கொள்ளப்படும் என்று பதில் தெரிவித்தார்.